Subscribe Us

Header Ads

Happy Life Poems and Quotes In Tamil

HAPPY LIFE POEMS 

AND QUOTES IN TAMIL


Happy Life Poems and Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, நாம் வாழ்க்கையைச் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே நம்முடைய வாழ்க்கையின் முதல் நோக்கமாககும். நம்முடைய அழகிய வாழ்க்கையை நாம்  இன்பமாக வாழ அனுதினமும் பல நல்ல செயல்களைச் செய்கிறோம். என்றும் மன நிம்மதியோடும் மன மகிழ்ச்சியோடும் வாழும் வாழ்க்கையே நிறைவான ஒரு  வாழ்க்கையாககும். நாம் அனைவரும் ஆனந்தமான வாழ்க்கையை வாழ இறைவனைப் பிரார்த்திப்போம். நீங்களும் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ தமிழில் எழுதிய Happy Life Poems and Quotes-யை பதிவிட்டுள்ளோம்.


Happy Life Poems and Quotes In Tamil


1. கடந்த அந்த நிகழ்வுகள்
எல்லாம் நினைவுகளாய்
இன்று மலர்ந்தது
கடக்கின்ற இந்த நிமிடங்கள்
எல்லாம் நிரந்தரமாய்
நாளை மனதில் இருக்கட்டும்
ஒவ்வொரு நாளையும்
மகிழ்ச்சியாக கடப்போம்



2. நேற்று நிகழ்ந்த நிகழ்வுகள்
இன்றைய நிம்மதியான நினைவுகள்
மனமெங்கும் நல்ல 
நினைவுகள் நிறையட்டும்
வாழ்க்கை முழுவதும் 
இன்பங்கள் பெருகட்டும்



3. வாழ்க்கையின் ரகசியம் புரிய
ரசிப்பவனனாய் இரு
வாழ்க்கையின் அழகு புரிய
அன்பவனாய் இரு
வாழ்க்கையின் மகத்துவம் புரிய 
மனிதனாய் இரு
வாழ்க்கையின் காவியம் புரிய
கவிஞனாய் இரு



4. மரணம் அழைத்து 
செல்லும் வரை
மண்ணில் மனிதராய்
என்றும் மகிழ்ச்சியாய்
நாளும் நலமாய் வாழ்வோம்



5. கோபம்,பொறாமை, சண்டை
இவையெல்லாம் அழித்து விட்டு
பாசத்தோடும் நேசத்தோடும்
ஒன்றாய் இணைந்து
வாழும் வாழ்க்கையே
என்றும் சிறப்பு



6. கடைசியில் இந்த மண்ணிலிருந்து
எந்த பொருளையும் கொண்டு 
செல்ல போவதில்லை
கொண்டு செல்வோம் மனதிலிருக்கும்
நல்ல நினைவுகளை
விட்டு செல்வோம் உள்ளத்திலிருக்கும்
நம்முடைய அளவற்ற அன்பை



7. நாம் ஆனந்தமான
வாழ்க்கையை வாழ 
முயற்சி செய்வோம்
பிறரையும் வாழ வைத்து
மகிழ்ச்சி அடைவோம்
நல்ல எண்ணங்களை 
நினைப்போம்
நல்லதைச் செய்வோம்
நாளும் நலமாக
எல்லோரும் சுகமாக
வாழுவோம்



8. வாழ்க்கையைப் போராடி 
வாழ்வததோடு 
சிரித்து மகிழ்ந்து
ஒவ்வொரு பொழுதையும் 
ரசித்து வாழ வேண்டும்
வாழ்க்கை எனும் பூங்காவில்
பூக்களாய் வாழ்வோம்



9. நாளைய பொழுதும் 
நிரந்தரமில்லை
இன்றைய பொழுதில்
முகத்தில் புன்னகையுடனும்
அகத்தில் அன்புடனும்
இன்பமாக வாழ்ந்திடுவோம்
இந்த தருணத்தில்
மகிழ்ந்திடுவோம்



10. என்னடா இந்த வாழ்கை 
என எண்ணாமல்
இந்த வாழ்க்கைக்கு 
என்ன குறை என எண்ணி
இறைவனுக்கு நன்றிகள் கூறி
வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும்
பெற நாளும் பிரார்த்திப்போம்



11. நாம் சில சமயங்களில்
காரணமில்லாமல் 
சண்டை போடுவதால் தான் 
கடந்து போகும் சந்தோசங்கள் கூட 
வாழ்க்கையில் தொலைந்து போகிறது



12. சொல்லில் பண்பும்
செயலில் ஒழுக்கமும்
இருக்கும் மனிதன்
மகிழ்ச்சியாக
வாழ்க்கையை வாழ்கிறான்
பிறரையும் வாழ வைக்கிறான்



13. நாம் மகிழ்ச்சியாக 
வாழ்க்கையை வாழ்வதே
நம் வாழ்க்கையில்
நமக்கு கிடைத்த மிக 
பெரிய வெற்றியாகும் 



14. வாழும் வாழ்க்கையில் 
பிறரிடமும் அன்பு 
செலுத்தி வாழ்வோம்
நம்மால் முடிந்ததை 
பிறருக்குக் 
கொடுத்து உதவுவோம்
பிறரை வாழ்த்துவோம்
பிறருக்காகப் பிரார்த்திப்போம்



15. கவலைகளை 
மறைத்து வாழாதே
கவலைகளைக் கடந்து வாழு
இன்பங்களை வாழ மறக்காதே
இன்பங்களைப் பகிர்ந்து வாழு



16. வாழ்க்கையின் இறுதியில் 
முற்றுப்புள்ளி வைக்கும் வரை
வாழ்க்கையை ரசித்து
வாழ்வதைப் புரிந்து
ஒவ்வொரு வாழ்க்கை 
பக்கத்தையும் மகிழ்ந்து 
எழுதுவோம்



17. மன அமைதியும்
மன மகிழ்ச்சியும்
உங்கள் வாழ்க்கையின்
நோக்கமாக இருந்தால்
மற்றவை எல்லாம் தானாகவே 
உங்கள் வாழ்க்கையில் 
அமைந்து விடும்



18. வாழ்க்கையில் எல்லாம்
கிடைத்த பிறகு தான் 
மகிழ்ச்சியாய் வாழ்வேன் 
என எண்ணி 
உன் வாழ்க்கையை 
நீ தொலைத்து விடாதே
வாழும் ஒவ்வொரு நேரத்திலும்
மகிழ்ச்சியாய் இருக்க முயற்சித்திடு



19. வாழ்க்கையில்
பெரிய எதிர்பார்ப்புகளை 
எதிர் பார்த்து
கடந்து போகும் 
சின்ன சின்ன சந்தோசங்களை 
இழந்து விடாதீர்கள்
காலம் கடந்த பின் வருந்தாமல்
இன்றே சிரித்து கொண்டு 
மகிழ்ச்சியாய் வாழுங்கள்



20. கவலையைக் கண்ணீராக்கி 
கொள்ளும் நாம்
சிரிப்பதையும் இயல்பாக்கி 
கொள்வோம்
சிரித்து மகிழு
சிந்தித்து வாழு



21. சந்தோசங்களைத் தேடாதீர்கள்
உருவாக்கி கொள்ளுங்கள்
உங்கள் மன மகிழ்ச்சியை
நீங்களே அமைத்துவிடுங்கள்



22. சிலர் வாழ்க்கையின் 
கஷ்டங்களை மட்டும் பார்த்து
வாழ்க்கை என்பது  
கடினமான பரீட்ச்சை 
என்று சொல்லுகிறார்கள்
சிலர் வாழ்க்கையின் 
இன்பங்களை உணர்ந்து பார்த்து 
வாழ்க்கை என்பது  
கடவுளின் பரிசு 
என்று எண்ணுகிறார்கள்



23. நீங்கள் தவற விட்ட தருணங்களை 
எண்ணி வருந்தாதீர்கள்
நீங்கள் வாழும் இந்த
தருணத்தில் சிறப்பாய்
வாழ்வதே நல்லது



24. வாழ்க்கையின்  
நிகழ்வுகளை  ரசித்திடுங்கள்
மன நிம்மதியை அடையுங்கள் 
நிமிடமும் சிரித்து மகிழ்ந்திடுங்கள்
நாட்களை இன்பமாய் மாற்றுங்கள்



25. அன்பை பகிர்ந்து கொள்வதில்
வாழ்க்கை அழகாகிறது
வாழும் தருணம்
இனிமையாகிறது



26. வாழ்க்கையில் மகிழ்ச்சி 
என்பது கிடைப்பதில் இல்லை 
பிறருக்கு கொடுப்பதில் 
தான் இருக்கிறது



27. எந்தவொரு செயலை செய்தாலும் 
மன நிறைவோடும் 
மன மகிழ்ச்சியோடும் செய்யுங்கள்



28. வாழ்க்கையில் நமக்கு 
யார் எந்த துன்பங்கள் கொடுத்தாலும் 
நம்முடைய மகிழ்ச்சியை 
நாம் எப்போதும் 
உருவாக்கி கொள்ளலாம்



29. வாழ்க்கையில் எதையும் 
எதிர்கொள்ளும் துணிச்சல் 
நம்மிடம் இருந்தால் 
நாம் வாழ்க்கையை 
மகிழ்ச்சியாக வாழலாம்



30. நீ மகிழ்ச்சியாக 
இருந்தால் தான் 
உன்னால் மற்றவர்களை 
மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியும்



31. நமக்கு பிடித்த படி 
நாம் வாழ்ந்தால் தான் 
நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும்



32. மகிழ்ச்சி என்பது 
உன்னிடத்தில் தான் உள்ளது
அது மற்றவர்களிடம் தேடாதே



33. ஒவ்வொருவரின் 
மகிழ்ச்சிக்கும் பின்னால் 
பல சோகங்கள் இருக்கிறது



34. நம்முடைய செயல்களும் 
வார்த்தைகளும் 
பிறரை துன்பம் 
படுத்தாமல் இருந்தால் 
மகிழ்ச்சி நம்மை தேடி வரும்



35. மகிழ்ச்சி என்பது 
எங்கேயும் இல்லை 
அது நம் மனதில் 
தான் இருக்கிறது
நாம் தான் அதை 
கவனிப்பதில்லை



36. நமக்கு பிடித்தவருடன் 
இந்த மண்ணில் நாம் 
எங்கு வாழ்ந்தாலும் 
நமக்கு மகிழ்ச்சி தான்



37. உண்மையான உறவுகளோடு 
வாழ்ந்தால் வாழ்க்கையில் 
தானாகவே மகிழ்ச்சி பிறக்கும்



38. மகிழ்ச்சியாக வாழ்வதை விட 
மன நிம்மதியோடும் 
மன நிறைவோடும் 
வாழ வேண்டும்



39. நாம் பிறரை 
மகிழ்ச்சி படுத்தாவிட்டாலும் 
பரவாயில்லை
யாருடைய மகிழ்ச்சியையும் 
நாம் அழித்து வாழ கூடாது



40. உலகில் எங்கு சென்றாலும் 
மனதில் மகிழ்ச்சி இருந்தால் 
நாம் சிறப்பாக வாழலாம்



41. நாம் அனைவரும் 
செய்யும் பெரிய தவறு
மகிழ்ச்சியாக நினைவுகளை 
நினைத்து பார்க்காமல் 
கவலையான நினைவுகளை மட்டும் 
எப்போதும் நினைத்து பார்ப்பது



42. நல்ல எண்ணங்கள் 
மனதில் பிறந்தால் 
மன மகிழ்ச்சியும் நிலைக்கும்



43. வாழ்க்கையில் 
எல்லாம் நம்முடைய 
நன்மைக்காகவே நடக்கிறது 
என்று நினைத்தால்
மகிழ்ச்சியோடு நாமும் வாழலாம்



44. வாழ்க்கையில் எல்லாம் மாறும்
நம்முடைய கவலைகளும் 
தொலைந்து போகும்
மகிழ்ச்சியும் நம்மை தேடி வரும்



45. நாம் ஒருவருக்கு உதவி செய்தால் 
அதில் இருவருக்கும் 
மகிழ்ச்சி கிடைக்கும்



46. மகிழ்ச்சி என்பது 
ஆடம்பரமான 
வாழ்க்கையில் இல்லை 
நாம் அமைத்து கொள்ளும் 
எளிதான வாழ்க்கையில் 
தான் இருக்கிறது



47. நம்மை யாரோடும் 
ஒப்பிட்டு பார்க்காமல் 
இருந்தாலே போதும் 
நம்முடைய மகிழ்ச்சி 
நம் வாழ்நாள் முழுவதும் 
நம்மோடு இருக்கும்



48. வாழ்க்கையில் எவ்வளவு 
காலம் வாழ்கிறோம் 
என்பதை விட எவ்வளவு 
சந்தோசமாக இருக்கிறோம் 
என்பதே முக்கியம்



49. வாழ்க்கையில் 
போதும் என்ற மனம் 
நமக்கு வேண்டும் 
இல்லையென்றால் 
பேராசையால் நம்முடைய 
சந்தோசத்தை இழந்து விடுவோம்



50. வாழ்க்கையில் 
எதுவும் இல்லாதவனுக்கு 
எது கிடைத்தாலும் 
மகிழ்ச்சி தான் 
எல்லாம் இருப்பவனுக்கு 
எவ்வளவு கிடைத்தாலும் 
மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை



51. வாழ்க்கையில் ஏற்படும் 
அழகிய நிகழ்வுகளும் 
சின்ன சின்ன விஷயங்களுமே 
நமக்கு அதிக 
மகிழ்ச்சியைத் தருகின்றது



52. வாழ்க்கையை நன்கு புரிந்து 
அதை ரசித்து வாழ்ந்தால்
வாழ்க்கை என்பது 
மகிழ்ச்சி நிறைந்த 
ஒரு அழகிய பயணம்



53. நீங்கள் இது வரை 
கடந்து வந்த 
வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு 
மகிழ்ச்சியாக இருந்தீர்கள் 
என்று நினைத்து பாருங்கள்
இனி எப்படி 
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் 
என்பதை சிந்தித்து திட்டமிடுங்கள்



54. பிறரால் நீ மகிழ்ச்சியாக 
வாழ்வதை காட்டிலும்
உன்னால் பிறர் 
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்



55. தன்னிடம் இருக்கும் 
சோகத்தை மறந்து 
பிறரை சிரிக்க வைப்பதும் 
ஒரு இன்பம் தான்

Post a Comment

0 Comments