Subscribe Us

Header Ads

God Quotes In Tamil

GOD QUOTES IN TAMIL


God Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே. நம் வாழ்க்கையின் இன்பத்திலும் துன்பத்திலும்  நமக்கு கடவுளின் அருள் மிகவும் தேவைபடுகிறது. கடவுளின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்களைக் கடவுள் ஒரு போதும் கைவிட்டதுமில்லை மறந்ததுமில்லை .கடவுளின் ஆசியும் அன்பும் நமக்கு மிகவும் முக்கியம்.கடவுள் நம்பிக்கையோடு நம் வாழ்வை தொடருவோம்.இந்த பதிவில் உங்களுக்காக தமிழில் எழுதிய God Quotes-யை பதிவிட்டுள்ளோம். 



God Quotes In Tamil



1. இறைவன் நம்பை பாதுகாப்பார் 
என்ற நம்பிக்கையோடு 
வாழ்கையை 
இனிதாய் எண்ணுவோம் 
இன்பமாய் வாழ்வோம் 



2. நமது சக்திக்கு மீறி
நாம் சோதிக்க படுகிறோம் என்றால்
நாம் இறைவனுக்கு மிகவும்
நெருக்கமானவர்கள் என்று அர்த்தம்



3. இறைவன் புதிய இன்னல்களால்
நமக்கு சில 
துன்பங்களை வழங்குகிறான் 
நிறைய பிரார்த்தனைகளால் 
நமது பிரச்சனைகளுக்கு 
தீர்வு கொடுக்கிறான் 
ஆழ்ந்த பக்தியால் நமக்கு 
பல இன்பங்களைத்  தருகிறான் 



4. இறைவனின் இறையருள் இருந்தால் 
இதய அழகும் அமைதியும் 
கோவிலாக மாறும் 
இறைவன் அருளும் அன்பும் 
கோடியாக குவியும் 
கண்களில் விழியில் 
நற்குணங்கள் காட்சிகளாகத்  தெரியும் 
கடவுளின் ஒளியில் 
நன்மைகள் சாட்சிகளாகப் புரியும் 
ஆன்மிகம் ஆழமாய்
அகத்தில் மலரும் 
ஆண்டவர் ஆசிர்வாதம் 
ஆயுளில் கூடும் 



5. என் நாட்கள் அழகாக அமைய
என் இரவுகள் அமைதியாக இருக்க
என் மனதில் இன்பங்கள் நிலைக்க
நான் இறைவனிடம் 
நாளும் பிரார்த்திக்கிறேன்



6. நான் இறைவனுக்கு
நன்றிகள் கூற 
ஒரு போதும் மறந்ததில்லை
ஏனென்றால் ஒவ்வொரு நாளும் 
இறைவன் என்னை 
மகிழ்ச்சியாக வாழ வைக்கிறார்



7. நம் வாழ்க்கையில் நிகழும் 
எல்லா விஷயங்களும் 
இறைவனால் முடிவு செய்யப்பட்டதே
நல்லது நடந்தால்  
நமக்கு ஆனந்தம்
கெட்டது நடந்தால் 
நமக்கு  அனுபவம்



8. பிறரிடம் கூறும் உன் 
பிரச்சனைகளைச் சற்று 
பிரார்த்தனையில்  கூட்டினால் 
பிறக்கும் நல்ல தீர்வு 



9. தலை குனிந்து என்னை பார்
தலை நிமிர்ந்து உன்னை 
வாழ வைக்கிறேன் 
என்கிறார் கடவுள் 



10. கடவுளை கண்டதில்லை 
என்று சொல்லாதீர்கள்.
நமது கஷ்டங்களில் உதவி செய்யும் 
நல்ல உள்ளம் கொண்ட
அன்பானவர்கள் அனைவரும் கடவுளே 



11. அன்பான நம் இதயத்தில் 
இறைவன் இருந்தால்
அழகாய் மாறும் நம் வாழ்கையும் 



12. துன்பங்கள்  இன்றி 
வாழ வேண்டும் என்று 
டவுளிடம் வேண்டுவதை விட 
துன்பங்களைத் தாங்கும் 
வலிமையையும் 
கஷடங்களைச்சமாளிக்க கூடிய 
ஆற்றலையும் கொடு
என்று வேண்டுவதே சிறந்தது



13. பார்ப்பவன்  என்ன நினைப்பான் 
என்று பயந்து வாழாதீர்கள் 
படைத்தவன் என்ன நினைப்பான் 
என்று வாழுங்கள் 



14. அஞ்சுவதும் அடிபணிவதும் 
இறைவன் ஒருவனுக்கே 



15. எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையும் 
கடவுள் மேல் வை 
மனிதன் மேல் வைத்தால் 
ஏமாற்றம் நிச்சயம் 



16. எதையும் எதிர்கொள்ளும் இதயத்தையும் 
துன்பத்திலும்  துணிந்து போராடும் 
இதயத்தையும் இறைவனிடம் கேளுங்கள்  



17. தன்னிடம் இருப்பதை 
எண்ணி மகிழ்ந்து 
தினமும் இறைவனுக்கு 
நன்றிகள் கூறுபவனே 
வாழ்க்கையை 
மகிழ்ச்சியாக வாழ்கிறான்



18. இறைவனை 
நீ முழுமனதுடன் நம்பினால்
இறைவனே 
உனக்கு சிறந்த 
வழிகாட்டியாய் இருப்பார்



19. இறைவனின் ஆசீர்வாதம் 
நமக்கு இருப்பதால் தான் 
ஒவ்வொரு நாளையும் நாம் 
ன்றாக கடந்து போக முடிகிறது



20. நாளுக்கு நாள் 
இறைவனின் மேல் 
நீ வைத்திருக்கும் நம்பிக்கை 
அதிகரிக்கும் போது 
இறைவன் உனக்கு 
பல ஆனந்தத்தை 
அள்ளி கொடுப்பார்



21. இறைவன் உனக்கென
எழுதியதை யார் 
தடுத்தாலும் வெறுத்தாலும்
அது உன்னை வந்தடைந்தே தீரும் 



22. நல்ல செயல்களைச் 
செய்ய தயங்காதே 
இறைவன் உன் 
பக்கத்தில் இருப்பான் 



23. என்னை இவ்வுலகில் படைத்து 
என் வாழ்க்கையில் 
பல இன்பங்களைக் கொடுத்த 
எல்லாம் வல்ல இறைவனுக்கு
நான் கோடி நன்றிகள் 
கூறினாலும் போதாது



24. தினமும் பிரார்த்தனை 
செய்ய மறக்காதே
சில சமயங்களில் 
நீ எதிர்பார்க்காத 
நல்ல திருப்பங்களை 
இறைவன் உனக்கு கொடுப்பார்



25. இறைவன் எப்போதும் 
என் பக்கம் நின்றதாலே 
என் வாழ்க்கை பாதையில் 
இருந்த  பல 
துன்பங்களையும் கஷ்டங்களையும் 
நான் தைரியமாக சமாளித்து 
இன்று வாழ்க்கையில் 
வெற்றி பெற்றுள்ளேன்



26. நீ நினைத்தது நடந்து விட்டது 
என்றால் அது இறைவன் 
உனக்காக எழுதிய பாதை 
என்பதை தெரிந்து கொள் 
நீ நினைத்தது நடக்க வில்லை 
என்றால் அது உனக்கான 
பாதை இல்லை
இறைவன் அதிலிருந்து 
உன்னை பாதுகாக்கிறார் 
என்பதை புரிந்து கொள் 



27.நம்முடைய பிரார்த்தனையில் 
இனி வாழ இருக்கும் 
வாழ்க்கைக்காக 
வேண்டி கொள்வோம் 
இனிதே வாழ்ந்து 
முடிந்த வாழ்க்கைக்காக  
இறைவனுக்கு நன்றி சொல்வோம் 



28. இன்பத்தில் கடவுளை
மறக்கிறது இதயம்  
துன்பத்தில் கடவுளை 
தேடுகிறது மனசு 



29. இது வரை இறைவன் 
உன்னை காத்திருக்க வைத்திருப்பது 
எதற்கு என்று
ஒரு நாள் உனக்கு புரியும்
இறைவன் என்றும் சிறந்ததை 
மட்டுமே உனக்கு  கொடுப்பார்



30. இன்று நீ  இருக்கும் 
நிலையைக் கண்டு 
நாளையைத்  தீர்மானித்து விடாதே
உன்னை படைத்த இறைவனுக்கு 
உன் நிலையை மாற்ற 
ஒரு வினாடி போதுமானது
என்றும் இறை நம்பிக்கையோடு 
வாழுங்கள்



31. கடவுள் இருக்கிறார்
நம்மை பாதுகாப்பார் என்று 
நினைக்கும் போதெல்லாம்
மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது




32. கடவுள் நம் வாழ்க்கையில் 
ஏதோ ஒரு கஷ்டத்தை 
நமக்கு கொடுப்பது 
நாம் அவரை 
நினைக்க வேண்டும் 
என்பதற்காக தான்



33. யாரும் நமக்கு 
உதவி செய்யாத 
தருணத்தில் கூட 
நம்மோடு என்றும் 
இருப்பவர் கடவுள்
நாம் தான் 
சில சமயங்களில் அவரை 
மறந்து விடுகிறோம்



34. நாம் கேட்ட நேரத்தில் 
நமக்கு அதனை கொடுக்காமல்
நமக்கு எது சரியான நேரமோ 
அப்போது நமக்கு அதனை 
கொடுப்பவர் கடவுள்



35. இறை நம்பிக்கை உள்ளவர்கள் 
வாழ்க்கையில் வரும் 
இன்னல்களைக் கண்டு 
அஞ்சுவதில்லை



36. இறைவன் இருக்கிறார்
என்பதை சில சமயங்களில் 
நமக்கு அவர் உணர்த்துகிறார் 
நாம் தான் அதை 
புரிந்து கொள்வதில்லை



37. கடவுளின் அருளால் 
வாழ்க்கையில் அனைத்து 
மகிழ்ச்சிகளையும் 
எளிதாக பெறலாம்



38. உலகில் வாழும் 
அனைத்து உயிரினங்களும் 
கடவுளின் குழந்தைகளே
கடவுளின் பார்வையில் 
எல்லோரும் சமம் தான்



39. வாழும் போது 
கடவுளை மறந்து விடுகிறோம்
மரணம் வரும் போதே 
கடவுளை நினைக்கிறோம்



40. இறைவனிடம் நமக்காக 
பிரார்த்தனை செய்வதோடு 
அனைவருடைய நலனுக்காகவும் 
பிரார்த்தனை செய்வது சிறந்தது



41. வாழ்க்கையில் 
இன்பங்களைப் பெறும் போது 
இறைவனுக்கு 
நன்றிகளைக் கூற வேண்டும்
துன்பங்களைப் பெறும் போது
அந்த கஷ்டங்கள் விலக 
இறைவனிடம் 
தீர்வு கேட்க வேண்டும்



42. நாம் செய்யும் 
பாவம் புண்ணியத்திற்க்கேற்ப 
இறைவன் நம் வாழ்க்கையில் 
இன்பங்களையும் துன்பங்களையும் 
கொடுக்கிறார்



43. வாழ்க்கையில் எது நடந்தாலும் 
எல்லாம் இறைவன் 
பார்த்து கொள்வார் என்று 
நினைக்கும்  போது 
மனதில் புது நிம்மதி பிறக்கிறது



44. நம் வாழ்க்கையைச் 
சிறப்பாக வாழ 
நமக்கு தேவையான 
அனைத்து ஆற்றலையும் 
இறைவன் நமக்கு 
கொடுத்திருக்கிறார் 
நாம் தான் அதை கண்டறிந்து 
முறையாக பயன்படுத்தி 
வாழ்க்கையை நல்ல முறையில் 
வாழ வேண்டும்



45. கடவுள் நமக்கு அளித்த 
மிக பெரிய பரிசு தான் 
இந்த வாழ்க்கை
அதை நன்கு வாழ்வது 
நமது பொறுப்பு



46. கடவுளின் படைப்பில் 
அனைத்தும் அதிசயம் தான்
அனைத்திற்கும் 
ஒரு தனி சிறப்பு இருக்கும்


Post a Comment

0 Comments