Subscribe Us

Header Ads

Women Quotes In Tamil

WOMEN QUOTES IN TAMIL


Women Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே. அன்பு , கருணை, அரவணைப்பு, பொறுமை என பல  நல்ல குணங்களை இயற்கையாகவே கொண்டவர்கள் பெண்கள். இந்த உலகத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் கிடைத்த கடவுளின் மிக பெரிய வரமாகப் பெண்கள் இருக்கிறார்கள். உலகில் இன்று பெண்கள் பல சாதனைகளைச் செய்து புது முன்னேற்றப் பாதையில் செல்கிறார்கள். இன்றைய பெண்கள் எதையும் துணிந்து செய்யும் துணிச்சலையும் ஆற்றலையும்   கொண்டவர்கள். என்றும் வலிமை, வீரம், துணிச்சல்  கொண்ட  பெண்களாக அவர்கள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களை மேலும் உற்சாகப் படுத்தி ஊக்குவிப்பதற்காக  இதோ தமிழில் எழுதிய Women Quotes.


Women Quotes In Tamil


1. பெண்ணே
நீ கண்ணீர் விடுவதை
நிறுத்தி விடு
உன் இலட்சியத்தை 
வென்று விடு
நீ அச்சம் கொள்வதை
அகற்றி விடு
உன் ஆசைகளைச்
சொல்லி விடு
நீ முடங்கி கிடப்பதை
எதிர்த்து விடு
உன் அறிவை
வளர்
த்து விடு
நீ அடிமையாய் வாழ்வதைத்
தவிர்த்து விடு
உன் வாழ்க்கையை
உயர்த்தி விடு


2. பெண்ணே
உன்னை 
தாழ்த்தியவர்களின் முன் 
தைரியமாக நட
உன்னை 
இழிவு செய்தவர்களின் முன் 
இலட்சியத்தோடு இரு
உன்னை 
எதிர்த்தவர்களின் முன்
எதையும் துணிந்து செய்
உன்னை 
மிதிப்பவர்களின் முன்
என்றும் நிமிர்ந்து நில்
உன்னை 
தடுத்தவர்களின் முன் 
எப்போதும் 
தன்னம்பிக்கையோடு இரு
உன்னை 
வாழ விடாதவர்களின் முன் 
சிறப்பாய் வாழு



3. பெண்ணின் மௌனத்தில் 
பல விடைகள் இருக்கிறது
மலராத மலராய்
அவள் மனமும் இருக்கிறது



4. பெண்களுக்குக் கோயில் 
கட்ட தேவையில்லை
பெண்களுக்குத் துன்பங்கள் 
கொடுக்காமல் 
இருந்தாலே போதும்
பெண்களைக் கோபுரத்தில் 
அமர்த்திட சொல்லவில்லை
பெண்களைக் காயம் 
படுத்தாமல் 
இருந்தாலே போதும்



5. பெண்கள் 
இல்லாமல் 
உலகம் இயங்காது
பெண்கள் இல்லாமல் 
வாழ்க்கையில்
இன்பம் இருக்காது



6. பெண்களின் அன்பு 
என்றும் ஒளியாய் வீசட்டும்
பெண்களின் பெருமை 
உலகம் எங்கிலும் பரவட்டும்
பெண்களின் உயர்வு
வானைத் தொடட்டும்
பெண்களின் தியாகத்தை
மண்ணில் அனைவரும் உணரட்டும்



7. அற்புதமான ஒரு உயிராய்
நல்ல வழிக்காட்டியாய் 
வாழ்கை துணையாய் 
நம் வாழ்க்கையின் பாதியாய்
இருக்கிறார்கள் பெண்கள்



8. பெண்ணே
உன் அறிவே உனக்கு அழகு
உன் ஆற்றலே உனக்கு ஆயுதம்
உன்னால் முடியும் என எண்ணி
வெற்றி பாதையில் நடந்திடு
இலட்சியத்தை அடைய முயன்றிடு
வாழ்க்கையில் முன்னேறு
வாழ்ந்து காட்டிடு



9. ஒரு பெண்ணின் குணமும் 
அவளது நடத்தையும் தான் 
அவளின் அழகை 
எடுத்துரைக்கிறது



10. ஒரு பெண் பொறுமையாக
இருப்பதில் தவறில்லை
ஆனால்
தன்னை தாழ்த்தி பேசுபவர்களிடம் 
பொறுமையாக போக கூடாது
சவால் விட்டு வாழ்க்கையில் 
சாதித்து காட்ட வேண்டும்



11. பெண்ணே
உன்னை நீ நேசித்திடு
உனக்காகப் போராடிடு
உன்னை உயர்த்திடு
உனக்காக வாழ்ந்திடு
புது மாற்றம்
ஒன்றைச் செய்திடு
பாரதி கண்ட 
புதுமை பெண்ணாய்
உருவெடுத்திடு



12. பெண்ணின் புன்னகை 
மலர்ந்த முகத்தில் 
கண்ணீர்த்துளிகள் வேண்டாம்
பெண்ணின் மகிழ்ச்சி 
வாழ்ந்த அகத்தில்
துயரங்கள் வேண்டாம்
சோர்ந்து போகாமல் 
எழுந்து வா பெண்ணே
பயந்து போகாமல் 
துணிந்து வா பெண்ணே
நீ முயன்றால் வெற்றி நிச்சயம்
உன்னால் எதுவும் சாத்தியம்



13. கண்களின் கண்ணீர் 
எண்ணிலடங்கா
பெண்களின் வெற்றிகள்
சொல்லிடங்கா



14. கண்கள் இல்லாத உருவம்
இருளில் சூளும்
பெண்கள் இல்லாத உலகம்
இன்னலில் சுடும்



15. பெண்கள்
உதட்டில் சிரிப்பை வைத்து
உள்ளத்தில் சோகத்தை மறைத்து
பல ரகசியங்களை 
மனதிற்குள் புதைத்து
வெளியில் இயல்பான 
வாழ்க்கையை வாழ்கிறார்கள்



16. பெண்ணாக பிறந்து 
விட்டோமே என்று புலம்பாதே
பெண்ணாக பிறந்ததில்
பெருமை கொள்
ஒரு வீரமான 
பெண்ணாய் வாழ்ந்திடு



17. ஒரு பெண் 
பல வேலைகளை 
ஒரே நேரத்தில் செய்யும் 
ஆற்றலைக் கொண்டவள் 



18. ஒரு பெண் என்பவள் 
மெழுகுவர்த்தி போன்றவள்
உன் அன்பால் மெல்ல உருகுவாள்
அவளின் அன்பால் உன்னை உருக்குவாள்



19. மண்ணில் பிறந்த 
ஒவ்வொரு பெண்ணும் 
ஒரு பொக்கிஷம் தான்
பெண்ணே!
பிறரின் பொய்யான 
வார்த்தைகளை நம்பி 
உங்கள் மனதை 
நீங்களே புண்படுத்தி கொள்ளாதீர்கள்



20. பெண்கள்
பல திறமைகளைத் 
தனக்குள் வைத்திருந்தாலும் 
தன்னடக்கத்தோடு வாழ்கிறார்கள்
பல ஞானங்களை
இன்னும் ஆர்வத்துடன்
கற்று கொள்கிறார்கள்



21. அன்று வீட்டை விட்டு 
வெளியே வராத பெண்கள்
இன்று விண்வெளியில் 
கால் பதித்து 
உலகை வியக்க வைக்கிறார்கள்



22. பெண்களை அடிமையாக்கி 
வாழ்ந்த காலம் போய்
இன்று பெண்கள் நாட்டை
சிறப்பாக ஆட்சி செய்கிறார்கள்



23. வாழ்க்கையின்
துயரங்களையும்
தடைகளையும் பார்த்து
மனம் தளராமல்
தன்னால் முடியும் வரை
துணிந்து நின்று
தன்னம்பிக்கையோடும்
தைரியத்தோடும்
போராடும் பெண்கள்
அனைவருக்கும் பாராட்டுக்கள்



24. பெண்ணை மதித்து மரியாதை
செலுத்துவர்களுக்குப்
பெண் மலர்போல் இருப்பாள்
பெண்ணை மிதித்து துன்பம்
தருபவர்களுக்குப்  
பெண் முள்ளாய் மாறுவாள் 



25. உலகில்
பெண்களை அடிமையாக 
நடத்துவதை அழிக்க வேண்டும்
பெண்களுக்கு 
முன்னுரிமை கொடுத்து 
உதவ வேண்டும் 



26. ஒரு பெண்ணின் 
சிரிப்புக்கு பின்னால் 
பல சோகங்கள் 
மறைந்திருக்கிறது



27. பெண்கள் மகிழ்ச்சியாக 
இருக்கும் போது 
நிறைய பேசுவார்கள்
பெண்கள் சோகமாக 
இருக்கும் போது 
மௌனமாக இருப்பார்கள்



28. பெண்கள் தனக்கு 
பிடித்தவர்களிடம் மட்டும் 
குழந்தையாக மாறி விடுவார்கள்



29. தன்னுடைய 
வாழ்கை துணையை
எப்படியாவது வாழ்க்கையில்
உயர்த்த வேண்டும் 
என்ற எண்ணம் 
பெண்களுக்கு இருக்கிறது



30. அனைவருடைய சோகத்திலும் 
பங்கெடுத்து கொள்வாள் பெண்
அவளின் சோகத்தில் 
அவளுக்கு ஆறுதலாக இருப்பது 
அவளுடைய கண்ணீர் மட்டுமே



31. தனக்கு எத்தனை 
துன்பங்கள் வந்தாலும் 
அதை எளிதாக தாங்கி கொள்ளும் 
பெண்ணின் மனசு
ஆனால் அவளின் 
அன்புக்குரியர்களுக்கு 
ஒரு துன்பம் என்றால் 
அவளால் அதனை 
தாங்கி கொள்ள முடியாது



32. இன்று பெண்கள்
அழுவதும் இல்லை 
அஞ்சுவதும் இல்லை
துணிச்சலுடன் இருக்கிறார்கள்
தனக்கென ஒரு அடையாளத்தை
அமைத்து வாழ்கிறார்கள்



33. ஒரு பெண் சுயமாக 
தன்னையும் உயர்த்தி கொள்வாள்
தன்னை சுற்றியுள்ள நபர்களும் 
வாழ்க்கையில் முன்னேற 
உறுதுணையாக இருப்பாள்



34. பெண்கள் தங்களுடைய 
வாழ்க்கையைத் தனியாக 
வாழ பயப்படமாட்டார்கள்
அவர்களிடம் இருக்கும் 
எதாவது ஒரு 
திறமையைக் கொண்டு 
அவர்கள் வாழ்க்கையில் 
முன்னேற்றம் அடைவார்கள்



35. அழகிலும் சரி
குணத்திலும் சரி
பெண்மை என்றும் 
அற்புதமான ஒரு அதிசயமே



36. தன்னுடைய கனவுகளை 
எப்படியாவது சாதித்திட வேண்டும் 
என்ற பிடிவாதமும் விடாமுயற்சியும் 
பெண்களிடம் இருப்பதால் தான் 
அவர்கள் எல்லா துறைகளிலும் 
பல சாதனைகளை உருவாக்குகிறார்கள்



37. அன்று பெண்களுக்கு 
மதிப்பும் மரியாதையும் 
கொடுக்காத உலகம் 
இன்று அவர்களின் வெற்றிகளைக் 
கண்டு வியக்கிறது
பல விருதுகளையும் பாராட்டையும் 
அவர்களுக்கு வழங்குகிறது



38. பெண்கள் உலகில் 
எங்கு சென்றாலும் 
தன்னுடைய திறமையாலும் அறிவாலும்
தனக்கென ஒரு அடையாளத்தை 
உருவாக்கி கொண்டு 
இந்த உலகில் பெண்களால் 
அனைத்து செயல்களிலும் 
சிறந்து விளங்க முடியும் 
என்பதை 
நிரூபித்து காட்டுகிறார்கள்



39. பெண்களை 
மதிக்க தெரியாதவர்கள் தான் 
அவர்களின் ஆற்றலையும் 
அறிவையும் கண்டு 
பொறாமை கொள்வார்கள்
பெண்களை மதிக்க தெரிந்தவர்கள் 
அவளின் துணிச்சலைக் கண்டு 
பெருமை கொள்வார்கள்



40. தன்னை அன்பாக 
மதித்து பழகுவோரிடம் 
அளவற்ற அன்பை 
கொடுப்பவளும் பெண் தான்
தன்னை தாழ்வாக எண்ணி
அடிமையாக நடத்துவோரிடம்
அதிக கோபம் 
காட்டுபவளும் பெண் தான்



41. பெண் தானே 
அவளால் 
என்ன செய்ய முடியும் என்று
பெண்ணை அலட்சியம் படுத்தாதே
உனக்கு உயிர் கொடுத்து 
உன்னை இந்த உலகிற்கு 
அறிமுகம் செய்தது 
ஒரு பெண் என்பதை நீ மறவாதே



42. பெண்களின் பாதி வாழ்க்கை 
கனவில் கலைந்து போகிறது
மீதி வாழ்க்கை கண்ணீரில்
கரைந்து போகிறது



43. தன்னால் முடிந்தவரை 
வாழ்க்கையில் எதையாவது 
ஒன்றை சாதித்து காட்டி 
பெண்களுக்கு பெண்களே 
பெருமையைச் சேர்க்கிறார்கள்
மற்ற பெண்களுக்கு 
ஒரு எடுத்துக்காட்டாகவும் 
வழிகாட்டியாகவும் 
திகழ்கிறார்கள்   

Post a Comment

0 Comments