Subscribe Us

Header Ads

Sad Poems and Quotes in Tamil

SAD POEMS AND QUOTES IN TAMIL


Sad Poems and Quotes in Tamil



வணக்கம் நண்பர்களே. இன்றைய உலகில்,நாம் அனைவரும் முகத்தில் புன்னகையுடன் இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு கவலையைச் சுமந்து கொண்டு தான் இருக்கிறோம். யாரிடமும் கூற முடியாத கவலைகளையும் மன வேதனைகளையும் கவிதைகளாக எழுதும் பொழுது நமக்கு ஆறுதல்  பிறக்கின்றது. கவலைகளை  எல்லாம் போக்கி மனதில் நிம்மதி பிறக்க செய்கிறது சில கவிதைகள்.இந்த பதிவில் தமிழில் எழுதிய Sad Poems and Quotes-யை பதிவிட்டுள்ளோம்.



Sad Poems and Quotes in Tamil



1. அகத்தின் அழகு அன்பு 
முகத்தின் அழகு சிரிப்பு 
அகத்தின் ஆழம்   
எவருக்கும் புரியாது 
முகத்தின் மூலம் 
எதிரியும் தெரியாது 
அகத்தில் ஒரு கனவு 
கண்ணாடி உடைந்தது 
முகத்தில் ஒரு கவலை 
கண்ணீர் வந்தது 


2.  பல இன்பங்களினால் கூட 
சில கவலைகளை
அழிக்க முடியாது
அதுவாகவே நம் 
மனதை விட்டு விலகி 
சென்றால் தான் 
நம் மனதில் நிம்மதி பிறக்கும்



3.  மீண்டும் ஒரு முறை 
கவலைகள் இல்லாத
குழந்தைகளாக 
மாறிவிட மாட்டோமா 
என்ற ஏக்கம் 
எல்லோரின் மனதிலும்  உண்டு 



4. வலிகள் ஆயிரம் இருந்தும் 
வார்த்தைகள் 
உள்ளத்தில் மௌனம் 
சொல்ல தெரியவில்லை 
பல சோகத்தை 
செவிசாய்க்க தேடுகிறேன் 
நல்ல மனதை 



5. என் முகம் ஏனோ 
காலை கதிர் போல
என் அகம் ஏனோ 
இரவு இருள் போல



6. கடிதத்தில் இணைந்தது 
உணர்வுகள் அன்று 
கண்ணெதிரில் பிரிந்தது 
உயிர்கள் இன்று 
கடிதத்தில் காதல் அன்று 
கண்ணெதிரில் தேடல் இன்று 
கடிதத்தில் உறவுகள் அன்று 
கண்ணெதிரில் பிரிவுகள் இன்று 



7. கால் தடுமாறினால் 
விழுந்து விடுகிறோம் 
மனம் தடுமாறினால் 
அழுது விடுகிறோம் 



8.  காற்றில் வந்த பாடலோ 
இதயத்தில் பதிந்தது 
கண்களில் வந்த துக்கமோ 
இரவில் தொலைந்தது 
மண்ணில் வந்த குளிரோ 
உடலில் சேர்ந்தது 
மனதில் வந்த சோகமோ 
உள்ளத்தில் மலர்ந்தது 
வானில் வந்த நிலவோ 
காலையில் மறைந்தது 
வாழ்க்கையில் வந்த நினைவோ 
கண்ணீரில் தொடர்ந்தது 



9. கரையைச் சேர்வது அலைகள் 
கண்களைப் பிரிவது அழுகைகள் 



10. கவலைகள் இருந்த போதும்
கல கல வென சிரிக்கிறேன்
எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்
என்ற நம்பிக்கையோடு 
நாளும் வாழ்கிறேன்



11. கவலைகளை நினைத்து 
கண்ணீர் சிந்துவதும்
அதனை மறந்து
வருவதை எதிர்கொள்வதும்
அவரவர் எடுக்கும் 
முடிவில் தான் இருக்கிறது



12. எனக்காக இங்கு 
யாருமில்லை  என்பதை விட
யாருக்கும் நான் 
பாரமாக இல்லை 
என்பதே உண்மை



13. இவ்வுலகில் 
தண்ணீர் பஞ்சம் இருக்கலாம் 
இப்பிறவில் 
கண்ணீர் பஞ்சம் இருக்காது 



14. கடலின் அலையில் 
கடக்கும் கப்பல்கள் 
காலத்தின் அசைவில் 
கரையும் கவலைகள் 



15. விழியில் வந்து போவது 
அனைத்தும் மறையும் 
காட்சிகள் 
மனதில் கடந்து சென்றது 
அனைத்தும் மறக்காத 
சாட்சிகள் 



16. தனியாக இருந்த 
என் மௌனத்துடன் தென்றலே 
உரையாடலாக வந்தது 
இருளாக இருந்த 
என் இதயத்துடன் வெண்ணிலவே 
ஒளியாக வந்தது 
சோகமாக இருந்த 
என் முகத்துடன் நட்சத்திரமே 
பிரகாசமாக வந்தது 
பாரமாக இருந்த 
என் உள்ளத்துடன் பாடல்களே 
தாலாட்டாக வந்தது 
சூடாக இருந்த 
என் உடலுடன் இரவே 
குளிராக வந்தது 
தூங்க இருந்த 
என் கண்களுடன் கனவே 
கலையாக வந்தது 



17. கண்கள் பார்ப்பதை எல்லாம் 
படமாக்கி கொள்வதில்லை இதயம் 
உதடுகள் சொல்வதை எல்லாம்
சோகமாக்கி கொள்கிறது இதயம்



18. இருளின் கருமைக்கும்
ஒரு விடியல் இருக்கிறது 
இதயத்தின் கவலைக்கும் 
ஒரு விடை இருக்கிறது 



19. என்னால் 
கண்ணீரை அடக்கவும்  
முடிவதில்லை
கதறி அழுவவும் 
முடியவில்லை
என் கவலைகளை 
மனதில் பூட்டி வைத்து 
நாளும் வாழ்ந்து 
கொண்டிருக்கிறேன்
மரணம் வரும் வரை
காத்திருக்கிறேன்



20. என்னை நான் சமாதானம் 
படுத்தி கொண்ட போதிலும்
சில துயரங்களை 
என் மனம் மறப்பதில்லை
என்னையும் நிம்மதியாக 
வாழ விடுவதில்லை



21. யாருமில்லை என்பதை விட 
யாரும் நிரந்தரமில்லை 
என்பதே உண்மை 



22. மௌனத்திலும் பேசி கொண்டு
தான் இருக்கிறோம் 
மற்றவர்களுடன் அல்ல 
நம் மனதோடு 



23. ஒருவரின் மரணம் 
மற்றவர்களுக்கு அது ஒரு இறப்பு 
சிலருக்கு அது ஒரு இழப்பு 



24. சிலர் முகங்களில் அழகு 
முகமூடி அணிவதால் 
பலர் அகங்களில் 
அன்பு அனாதையாய் அழுதது 



25. மழைத்துளிகள் மண்ணில் 
விழ ஒரு வெள்ளம் உருவாகிறது 
கண்ணீர்த்துளிகள்  
கையில்  விழ இந்த உள்ளம் 
உயிரிழக்கிறது 



26. மனம் மலையானால் 
கண்கள் மழையாகிறது 



27. உன்னை நேசிக்க யாருமில்லை 
என்று நீ உணரும் போது தான்
உன்னை நன்கு  
யோசிக்க வைக்கிறது 
வாழ்க்கை



28. துணையில்லா நேரத்தில் 
தனிமையாய் இருப்பதை 
எண்ணுவோம் 
அன்பில்லா நேரத்தில் 
அனாதையாய் இருப்பதை 
உணர்வோம்



29. கார்மேகத்திலிருந்து 
வந்த கண்ணீர் 
இயற்கை தந்தது 
கண்களிருந்து 
வந்த கண்ணீர்
இதயம் தந்தது 



30. எதை நாம் 
அதிகம் விரும்புகிறோமோ
அதுவே நம்மை 
அதிகம் காயப்படுத்தும்



31. எனது எல்லா கவலைகளையும்  
மறப்பதற்காக   
நான் உறங்க சென்றேன்
ஆனால் உறக்கத்திலும் கூட 
மீண்டும் அந்த கவலைகளே வந்து 
என் கண்முன் நிற்கிறது



32. சிலர் வேஷம் 
போட்டு நடிப்பதால்
நம்முடைய 
உண்மையான பாசத்திற்கு 
மதிப்பு இல்லாமல் போகிறது



33. எதிர்பாராமல் நிகழ்ந்து 
முடிந்த நிகழ்வுகளே 
என்றும் மறக்க முடியாத 
நினைவுகளாக மாறும் 



34. இதுவும் கடந்து போகும் 
என்பதை விட
இதுவும் பழகி போகும்
என்பதே
சில சமயங்களில் 
உண்மையாகிறது



35. நீ எனக்கு கொடுத்த 
அன்பு சிறியது 
ஆனால் உன் பிரிவால்
எனக்கு  ஏற்பட்ட காயம் பெரியது 



36. கஷ்டப்பட்டு உருவாக்கிய 
மகிழ்ச்சியான வாழ்க்கை
சில சூழ்நிலையால் 
ஒரு நொடியில் 
துயரமாக மாறி விடுகிறது 



37. சிலர் காயப்பட்ட மனதிற்கு 
பாசம் காட்டுவது போல நடித்து 
மீண்டும் பல காயங்களை
ஏற்படுத்துகிறார்கள்



38. கலைந்து போகும் கனவிலும்
வந்து செல்கிறது 
மறக்க முடியாத சில நினைவுகள்



39. கனவில் பாதி
கண்ணீரில் மீதி என
சிலரின் வாழ்க்கை 
இங்கு கடந்து போகிறது



40. உணவின் அருமை
பசித்தவனுக்கு புரியும்
உறவின் அருமை
இழந்தவனுக்கு புரியும்



41. இன்றைய காலத்தில் 
புகைப்படத்திற்க்காக மட்டும் 
புன்னகை செய்கிறோம்
மற்ற நேரங்களில் 
புன்னகை செய்ய மறந்து 
இந்த வாழ்க்கையை  
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்


42. மனதில் உள்ள வலிகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்காமலே
வாழ்க்கை முடிகிறது



43. பயனில்லாமல் பேசுவதை 
காட்டிலும் மௌனமே சிறந்தது
புரிந்துணர்வு இல்லாமல்
வாழ்வதை காட்டிலும் 
பிரிதலே நல்லது


44. மனதில் நிறைந்த 
வேதனைகளைக்
அமைதியாக எடுத்துரைக்கிறது
கண்ணீர்த்துளிகள்



45. காலங்கள் கடந்து போவதை
நான் பார்க்கிறேன்
ஆனால் என் காயங்கள் மாறாமல் 
இருப்பதை உணர்கிறேன்



46. நாம் நேசித்தவர் நம் அருகில் 
இல்லாதபோது அனாதை போல் 
உணர்வோம்
அவர்களின் அன்பிற்க்காக 
ஏங்கி அழுகை எனும் அருவியில் 
இருப்போம்



47. சில நினைவுகள் 
எல்லாம் 
நம்மை நிழல் போல் தொடர
நித்தம் கடந்து போகும்
வாழ்க்கையும் கடினமாகிறது



48. இன்று நம்மோடு 
சேர்ந்து சிரித்த மனிதன் 
நாளை நம்மை 
அழ வைக்கிறேன்
புரியாத புதிர் போல் 
இந்த வாழ்க்கை



49. பல ஆசைகள் 
என் மனதில் புதைந்து கிடக்கிறது
அதை கேட்க 
என் அருகில் யாருமில்லை



50. ஒவ்வொரு பிரிவிலும்
கடைசியில் நமக்கு 
கிடைக்கும் பரிசு 
வலிகளும் நினைவுகளுமே



51. உடைந்த மனதை யாரும்
கவனிப்பதில்லை
அந்த மனதிற்கு 
காலமும் கண்ணீரும் மட்டுமே 
ஆறுதல் சொல்கிறது



52. மனதில் பல வலிகளைச் 
சுமப்பவர்கள் அமைதியாக 
தான் இருப்பார்கள்
அவர்களின் வேதனைகளுக்கு 
காலமே பதில் சொல்லட்டும் என்று



53. உரிமையோடு பழகி விட்டதால் 
என்னமோ தெரியவில்லை 
உயிர் பிரியும் வலிகள் 
ஏற்படுகிறது 
சில உறவுகள் நம்மை 
விட்டு பிரியும் போது

Post a Comment

0 Comments