Subscribe Us

Header Ads

Positive Quotes In Tamil

POSITIVE QUOTES IN TAMIL


Positive Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, நாம் நல்ல செயல்களைச் செய்ய  நம்முடைய நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் நமக்கு உறுதுணையாக இருக்கிறது.நாம் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளோடு இருப்பது அவசியம். நாம் நல்ல பதிவுகளை அல்லது நல்ல புத்தகங்களைப்  படிக்கும் போது நம் மனதில் நிறைய நல்ல சிந்தனைகள் பிறக்கும். நீங்களும் உங்கள் வாழ்க்கையை நல்ல சிந்தனைகளோடு சிறப்பான முறையில் வழிநடத்த இதோ  உங்களுக்காகத் தமிழில் எழுதிய Positive Quotes-யை பதிவிட்டுள்ளோம். 



Positive Quotes In Tamil



1. நல்லதை செய்து    
நலமாய் இருப்போம்  
நம்பிக்கை வைத்தால் 
நாமும் வாழ்வோம்   


2. பிரச்சனையை நினைக்காதே 
பிராத்தனையை மறவாதே 



3.  உன் எண்ணங்கள் அழகானால்
உன்னை சுற்றி எல்லாமே 
அழகாகும் 
உன் வாழ்க்கையும் 
இனிதாகும்



4. எந்தவொரு செயலையும் செய்ய
மனம் விரும்பினால் 
ஆயிரம் வழிகள் பிறக்கும்
மனம்  விரும்பாவிட்டால்  
ஆயிரம் காரணங்கள் தோன்றும்



5. கண்களை மூடினேன் 
கனவுகள் பிறந்தது 
கண்களை திறந்தேன் 
இலட்சியம் நிறைவேறியது 
முதல் முறை பயந்தேன் 
தோல்விகள் தொடர்ந்தது 
மறு முறை முயன்றேன் 
வெற்றி மகுடம் கிடைத்தது 



6. தனிமையில் 
துணிந்து நடந்திடு 



7. பிறரிடமிருந்து பாராட்டுக்கள் 
பெறுவதற்கு மட்டும் 
ஒரு செயலை நீ செய்யமால் 
அச்செயலை நீ விருப்பப்பட்டு
முழுமனதுடன் செய்ய வேண்டும் 



8. தன்மானம் இல்லாத 
வாழ்க்கை என்றும் அவமானமே



9. உடல் தனிமையில் 
உள்ளம் இனிமையில் 
உல்லாசம் இந்த புதுமையில் 
உறையுமா இந்த இளமை? 



10. உன்னை சந்தோச படுத்தும்  
பொறுப்பை பிறர் கையில் 
ஒப்படைத்து விடாதே
உன் மகிழ்ச்சியை 
நீ தான் உருவாக்க வேண்டும்



11. தனிமை 
சிறையாய் பார்த்தால் 
கிடைக்கும் தண்டனை 
சிறகாய் பார்த்தால் 
கிடைக்கும் தன்னம்பிக்கை 



12. மனிதனுடன் மணிக்கணக்காய் 
பேசுபவன் ஏமாற்றங்களால் 
வருந்துகிறான் 
மனசாட்சியுடன் 
மனம்விட்டு பேசுபவன் 
மாற்றங்களால் வாழ்கிறான் 



13. தனிமையில் யோசித்திடு 
தன்னம்பிக்கையோடு எழுந்திடு 
தவறை உணர்ந்திடு 
தன்னை நேசித்திடு 
தயக்கம் வெறுத்திடு 
தடைகளை உடைத்திடு 
தாழ்வுகளைத் தள்ளிடு 
தரத்தை உயர்திடு 
தடம் பதித்திடு 
தரணியில் ஜெயித்திடு 



14. வாழ்க்கையில் 
சுயமாக முடிவெடுக்க தெரிந்தவன் 
அரசனை போல் வாழ்கிறான்
சுயமாக முடிவெடுக்க தெரியாதவன் 
அடிமையைப் போல் வாழ்கிறான்



15. ஆண்டவனும் ஆசைப்படுவது 
ஆனந்தமான உள்ளத்தையும் 
ஆரோக்கியமான உடலையும் 



16. வானவில்லிலும் வண்ணத்துபூச்சிலும் 
நல்ல வண்ணங்கள் 
வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும்
நல்ல எண்ணங்கள் 
நீர்விழ்ச்சிலும் நீண்டஇரவிலும் 
இனிய தோற்றங்கள் 
நினைவிலும் நிஜத்திலும் 
இனிய மாற்றங்கள் 
புத்தகத்திலும் புத்தனிடமும் 
புதிய போதனை
புவியிலும் புத்துணர்ச்சிலும் 
புதிய சாதனை 



17. இயல்பாக கோபம் 
வந்தால் மனிதன் 
இனிதாக கோபத்தை 
வென்றால் புனிதன் 



18. நீ மகிழ்ச்சியாக
இருக்கும் நாட்கள் அனைத்தும் 
உன் வெற்றி நாட்களே



19. வாழ்க்கையில் 
தினமும் நீ சிரித்து மகிழு
உன் திட்டங்களைச் சிந்தித்து செய்



20. உன் சோகத்திற்கு காரணம் 
உன் பிரச்சனைகள் அல்ல 
உன்னுடைய எண்ணங்களே



21. எவ்வளவு நேரம் சிந்திக்கிறோம் 
என்பது முக்கியம் அல்ல
எப்படி சிந்தித்து 
சிறப்பாக செயல்படுகிறோம் 
என்பதே முக்கியம்



22. தினமும் 
புன்னகையோடு 
புதிதாய் பிறந்திடு 
புத்துணர்ச்சியோடு 
புதிதாய் வாழ்ந்திடு



23. மனிதர்களிடம் பேசும் போது 
பொறாமையுடன் பேசாததே 
பொறுமையுடன் பேசு 



24. கற்று கொண்ட அனுபவம் 
கடக்க இருக்கும் வாழ்வுக்கு 
தேவையான அறிவாகும் 



25. தன்னம்பிக்கையால் மட்டுமே 
தடைகளை உடைத்து 
தரணியில் ஜெய்திடலாம் 



26. ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு நன்மைகளை 
தருகிறது 



27. உன்னால் முடியாதது 
எதுவுமில்லை 
உனக்கு நீதான் முட்டுக்கட்டை 
உனக்கு நீதான் முன்னேற்றம் 



28. நல்ல சிந்தனையோடு 
காலையில் எழுந்தால்  
முகமும் ஆனந்தமாக மாறும் 
மனதில் இன்பங்கள் சேரும் 



29. உன் நாளைய எதிர்காலம் 
இன்று நீ எடுக்கும்
முடிவிலும் முயற்சிலும் 



30. பிறரோடு ஒற்றுமையாக வாழு
ஆனால் பிறரோடு 
உன்னை ஒப்பிட்டு வாழாதே 



31. உன்னை நீ நம்பி வாழ்ந்தால்
உன் வாழ்க்கைக்கான 
வெற்றி என்றும் உன் வசம்



32. கோபம் கொண்டு 
ஒருவரிடம் ஜெயிப்பது பெரிதல்ல
பொறுமையுடன் இருந்து
ஒருவரை வெல்வதே சிறந்தது



33. நமக்கு பிடித்ததை 
வைத்து கொள்ளலாம்
ஆனால் 
நம்முடைய சுயநலத்திற்காக 
பிறரை பிடித்து வைக்க கூடாது



34. இங்கு யாரும் உன்னை பற்றி 
தவறாக பேசாதபடி 
உன் தகுதியை நீ உயர்த்தி கொள்



35. பயத்தை அளித்திடு 
பாதைகளும் பிறந்துவிடும் 
வருத்தத்தை எரித்திடு 
வாய்ப்புகளும் வந்துவிடும் 



36. இன்று நீ முயற்சி செய்தால் 
நாளை வளர்ச்சி உனதே 



37. எதிர்பார்ப்புகளைக் குறைத்து  
வாழ்வோம் நிறைவாக 



38. நாம் வாழ்வோம் 
பிறரை வாழவைப்போம் 
எல்லோரையும் வாழ்த்துவோம் 



39. நீ மகிழ்ச்சியான இடத்தில் 
வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தை 
மகிழ்ச்சியாக மாற்று
உன் வாழ்க்கை சிறப்பாகும்



40. வெட்டி பேச்சு 
பேசுவதை காட்டிலும்
மௌனமாக இருப்பதே சிறப்பு



41. நேரத்தை ஒரு போதும் வீணாக்காதே
ஏனென்றால் 
கரைந்து போவது காலம் அல்ல
உன் வாழ்க்கை தான்



42. இந்த பூமியில் 
ஒருவரை விட ஒருவர் 
உயர்ந்தவருமில்லை 
தாழ்ந்தவருமில்லை
எல்லோரும் இங்கு சமம் தான்



43. உன் பலவீனங்களை
நீ திருத்தி கொண்டாலே
நீ பலசாலியாக வாழலாம்



44. மனிதனின் வாழ்க்கையில்
உடல் நலமும் முக்கியம்
மன நலமும் முக்கியம்



45. வாழ்க்கை நமக்கு 
பல விஷயங்களைக் 
கற்று கொடுக்க தயாராக உள்ளது
நாம் தான் ஆர்வத்தோடு 
அதனை கற்று வாழ்க்கையைப் 
பயனுள்ளதாக மாற்ற வேண்டும்



46. நல்ல அறிவையும் 
அன்பான மனதையும் 
கொண்ட மனிதன் 
வாழ்க்கையைச் 
சிறப்பாக வாழ்கிறான்



47. துன்பங்களிலிருந்து 
வெளிவந்த பின் 
நமக்கு இன்பம் கிடைக்குமா 
என்று தெரியவில்லை 
ஆனால் எல்லாம் 
ஒரு அனுபவமாக மாறி விடும்



48. வாழ்கையில்
பல பிரச்சனைகளைப் 
போராடி வென்று 
மனிதன் தன்னை
வலிமையாக்கி கொள்கிறான்



49. நிகழ்காலத்தில் 
சரியாக வாழ்ந்தால்
எதிர் காலத்தில்
எல்லாம் தானாகவே 
சரியாக நடந்து விடும்



50. எந்தவொரு உதவியையும் 
தற்பெருமையோடு செய்ய கூடாது
மனதார வாழ்த்தி 
உதவி செய்ய வேண்டும்



51. வாழ்க்கையில் 
எல்லா சூழ்நிலையிலும் 
நம்முடைய இயல்பு மாறாமல் 
நடந்து கொள்ள வேண்டும்



52. தயக்கத்தையும் பயத்தையும்
தூரமாக வைத்தால் 
புதிய வாழ்வு கண் முன் தோன்றும்



53. ஒரு செயலை 
செய்வதற்கு முன் 
ஆயிரம் முறை யோசிக்கலாம்
அந்த செயலை 
தொடங்கிய பின் 
அதில் இருந்து பின் வாங்க கூடாது



54. வெற்றியை மட்டும் 
நினைத்து முன்னோக்கி ஓடு 
தோல்வியை ஒரு போதும் 
நினைத்து பார்க்காதே



55. உன் மதிப்பையும் 
உன் தகுதியையும் 
முடிவு செய்வது நீதான் 
மற்றவர்கள் அல்ல



56. சண்டை போடாமல்
சமாதானம் பேசுபவன் 
பயந்தவன் அல்ல
பகுத்தறிவு உள்ளவன்



57. நாம் நாமாகவே இருப்போம்
நம்மை பிடித்தவர்கள் 
நம்மோடு இருப்பார்கள்
நம்மை பிடிக்காதவர்கள் 
நம்மை விட்டு விலகி செல்வார்கள்



58. நீங்கள் வலிமையானவர் 
என்ற எண்ணம் 
உங்கள் மனதில் 
இருக்கும் வரை 
பிறரின் விமர்சனங்கள் 
உங்கள் மனதை காயப்படுத்தாது



59. கடந்து போனதை பற்றியும் 
வருந்த வேண்டாம்
இனி வருவதைப் பற்றியும் 
யோசிக்க வேண்டாம்
இந்த கணம் இன்பமாக 
இருப்பதே நல்லது



60. உன்னை அவமானம் படுத்தியவருக்கு 
நன்றி கூறு அவரால் தான் 
நீ உன் அடையாளத்தைக் கண்டு 
வாழ்க்கையில் 
வெற்றி பெற்றிருக்கிறாய்



61. எல்லா பிரச்சனைக்கும் 
ஒரு தீர்வு இருக்கிறது
அதனை எப்படி 
கண்டறிய போகிறோம் 
என்பது நம் கையில் தான் உள்ளது



62. வாழ்க்கையில் எந்த 
பிரச்சனைகளைச் 
சந்தித்தாலும் சரி 
தவறான பாதையில் 
மட்டும் போக கூடாது



63. நம்முடைய தவறை 
நாம் ஒப்பு கொள்ள வேண்டும் 
இல்லையென்றால் 
தவறுக்கு மேல் தவறை செய்து 
நம்முடைய மரியாதையை இழப்போம்



64. உன்னை பிறர் 
உயர்த்தி பேசுவதால் 
நீ உயர்ந்தவன் என்று 
அர்த்தம் இல்லை
பிறர் உன்னை தாழ்த்தும் போது 
நீ தாழ்ந்தவனும் இல்லை
நீ யாரென்று 
உனக்கு மட்டுமே தெரியும்



65.தெரியாதவர்களுக்கு 
அறிவை கற்று கொடு
தெரிந்தவர்களிடமிருந்து 
அறிவை கற்று கொள்



66. எல்லோரோடும் 
சிரித்து மகிழலாம் 
ஆனால் யாரையும் நம்ப கூடாது



67. இங்கு யாரும் நம்மை 
ஏமாற்றுவது இல்லை
நாம் தான் அவர்களின் மீது 
அதிக நம்பிக்கையும் 
எதிர்பார்ப்புகளையும்
வைத்து ஏமார்ந்து போகிறோம்

Post a Comment

0 Comments