Subscribe Us

Header Ads

Motivational Poems and Quotes in Tamil

MOTIVATIONAL POEMS IN TAMIL

Motivational Poems and Quotes in Tamil




வணக்கம் நண்பர்களே, நாம் அனைவரும்  வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும் போராட்டங்களையும் சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தினமும் மனம் தளரமால் பல முயற்சிகளைச் செய்யும் அணைத்து மனிதர்களும் சாதனையாளர்களே! நாம் சோர்ந்து போகும் நேரத்தில் யாரோ சொல்லும் ஊக்கம் நமக்கு மிகவும் அவசியம்.இதோ உங்களுக்காக இந்த பதிவில் தமிழில் எழுதிய Motivational Poems-யை கொடுத்துள்ளோம் 



Motivational Poems and Quotes in Tamil



1.  மலர்களும் இலைகளும் 
ஒரு செடியில் 
வெற்றியும் தோல்வியும் 
ஒரு வாழ்வில் 
இருளும் வெளிச்சமும் 
ஒரு உலகில் 
இன்பமும் துன்பமும் 
ஒரு இதயத்தில் 
குளிரும் கோடையும் 
ஒரு வருடத்தில் 
மூச்சும் அசைவும் 
ஒரு உடம்பில் 
சாதனைகளும் சவால்களும் 
ஒரு பிறப்பில் 
நீயும் கனவுகளும் 
ஒரு சரித்திரத்தில் 



2. பிறந்தோம் வாழ்ந்தோம் 
மடிந்தோம் சமாதியானோம் 
என்பது வாழ்க்கை அல்ல 
போராடினோம் வீழ்ந்தோம் முயற்சித்தோம் 
சாதித்தோம் என்பதே
நல்ல வாழ்க்கை 



3. முடியாது நான்கு எழுத்து 
முடிவும் நான்கு எழுத்து 
முடியாது என்று 
சொன்னால் 
முன்னேறாமால் போவாய் 
பின்னால் 
முடியும் என்று நினைத்தால் 
முயன்று வெல்வாய் முன்னால் 



4. கடந்த வாழ்க்கையை 
கண்ணில் கரைக்காதே 
கரையும் விடியல்களை 
விண்ணில் அழிக்காதே 
காத்திருக்கும் வெற்றியை 
மண்ணில் விட்டு விடாதே 



5. உனக்கு ஏற்பட்ட துன்பங்களை
நீ மறந்து விடு
ஆனால் அது கற்று கொடுத்த 
பாடங்களை என்றும் மறக்காதே



6. நீ எடுக்கும் சரியான முடிவுகள்
உன் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும்
நீ எடுக்கும் தவறான முடிவுகள்
உனக்கு அனுபவங்களாக இருக்கும்



7. வலிகள் ஆயிரம் 
இந்த மனதுக்குள் 
வழிகள் நூறாயிரம் 
இந்த மண்ணுக்குள் 
நாம் வலிகளைப் புதைத்து 
நல்ல வழிகளைத் தோன்றுவோம்



8. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் 
ஒவ்வொரு கஷ்டங்களும் 
நம்மை ஒரு படி மேலே 
உயர்த்திடவே வருகிறது 



9.  மண்ணில் பிறந்த 
ஒவ்வொரு மனிதனுக்கும் 
ஒரு தனி சிறப்பு இருக்கிறது
அதுவே அந்த மனிதனுக்கு 
அழகை சேர்க்கிறது



10. பலரின்  வெற்றி பாதைகள் 
நமக்கு முன் எடுத்துக்காட்டு 
பலரின் தோல்வி கதைகள் 
நமக்கு முன் எச்சரிக்கை 



11. கண்ணாடி அறியாது 
நீ யார் என்று 
கண்டு பிடித்து அறிந்திடு 
நீ யார் என்று 



12. ஒரு தீக்குச்சால்  
தீயை எழுப்ப முடியும் 
என்றால் 
உன் முயற்சியால் நீயே 
எழ முடியும் 



13. தோல்வி ஒரு தூசி 
கண்களில் நுழைந்தால் அழுகை 
கடந்து சென்றால் அனுபவம் 



14. ஒவ்வொரு விடியலும் 
இரவில் முடிகிறது 
ஒவ்வொரு விடாமுயற்சியும் 
இன்பமாய் முடிகிறது 



15. தோல்வி என்பது அனுபவம் 
வெற்றி என்பது அடையாளம் 
தோல்வி என்பது முடிவல்ல 
வெற்றி என்பது முடியாததுமல்ல



16. உன் முயற்சி தான் 
உனக்கு வளர்ச்சி கொடுக்கும் 
உன் திறமைகள் தான் 
உனக்கு பெருமைகள் சேர்க்கும் 



17. மேடு பள்ளம் போகும் 
பாதையில் இருந்தால் 
கடந்து செல்வோமே 
வெற்றி தோல்வி 
வாழும் வாழ்க்கையில் 
வந்தால் புரிந்து கொள்வோமே



18. தோல்விகள் நம்மை வருத்த
நாம் வாழ்க்கையை 
உடைக்க அல்ல 
தோல்விகள் நம்மை உயர்த்தி
நம் வளர்ச்சியை 
உருவாக்க மெல்ல 



19. கடந்த காலத்தை 
வருந்தி பயனில்லை 
கடக்கின்ற காலத்தில் 
வாழ மறந்ததில்லை 
கடக்க போகும் காலத்தை 
வரவேற்க பயமில்லை 



20. வாழ்க்கை பயணத்தில்
பல துன்பங்களைச் 
சந்தித்த பின்பு தான் 
நாம் வாழ்க்கையின் 
சரியான பாதையில்
பயணிக்க தொடங்குகிறோம்



21. நிறைய துன்பங்களால் 
உன் வாழ்க்கை 
இருண்டு விட்டது
என நினைக்காதே
மண்ணில் விதைக்கப்பட்ட 
விதை கூட  இருளிலிருந்து  தான் 
வெளிச்சத்துக்கு வந்து 
மரமாய் நிற்கிறது



22. எல்லாம் இழந்து விட்டோம் 
என்று நினைக்கியில் 
என்னை இழக்கவில்லை 
என்று நினைவுறுத்தியது
எதிர்காலம் 



23. மழை இல்லாமல்
வானவில் இல்லை 
மாற்றம் இல்லாமல் 
வாழ்க்கையும் இல்லை
 


24. வாழ்க்கையில் 
பல துன்பங்களைக் கண்டு 
உடைந்து போன 
உன் இதயமே 
திர்காலத்தில் எதையும் 
தாங்கும் இதயமாக இருக்கும்



25. வாழ்க்கையைச் சுயமாக 
வாழ பழகுங்கள்
யாரையும் நம்பி வாழாதீர்கள்



26. உன் வெற்றிக்கானத் தடைகளை 
உன் வெற்றிக்கான விடைகளாக 
மாற்றுவதே வெற்றி நடை 



27. வாழ்க்கையும் நீயே 
வாழ்வதும் நீயே 
வினாக்களும் நீயே 
விடைகளும் நீயே 
மகிழ்ச்சியும் நீயே 
மகிழ்வதும் நீயே 
புதிரும் நீயே 
புரிதலும் நீயே 
முயற்சியும் நீயே 
முயல்வதும் நீயே 
வெற்றியும் நீயே 
வெல்வதும் நீயே 



28. அவமானங்கள் தான் நம்மை
அடையாளமாய் மாற்றுகிறது 



29. அனுபவம் கற்று கொடுக்கும் 
படிப்பினை போல வேறு 
எந்த ஞானிகளும் நமக்கு 
எடுத்துரைக்க முடியும்



30. வாழ்க்கையில் சோர்ந்து 
மட்டும் போகாதே
அது  மேலும் 
பல தோல்விகளை
உனக்கு தந்து விடும்



31. வாழ்க்கையில் என்ன நடந்தாலும் 
அதை ஏற்று கொள்ள வேண்டும்
அடுத்து என்ன செய்யலாம் 
என்று திட்டம் போட வேண்டும்  



32. ஓவ்வொரு நாளும் 
ஒரு போராட்டம் தான் 
ஒவ்வொரு வகையில் 



33. உன்னால் முடியும் 
என நீ  நம்பிக்கை கொண்டால்
நீ முயற்சிக்கும் 
அனைத்திலும் வெற்றியே



34. நீ ஒவ்வொரு 
வியர்வை துளிகளையும் 
சிந்தும் போது
உன்னுடைய வெற்றி 
உன் கையில் வந்து சேரும்



35. எல்லாம் ஒரு நாள் மாறும்
ஆனால் வேதனைகளையும் 
வெற்றிகளாலாக மாற்றுவது 
நாம் எடுக்கும் 
முடிவில் தான் இருக்கிறது
சிந்தித்து செயல்படுவோம்



36. எல்லோருக்கும் 
வாழ்கை இருக்கிறது
ஆனால் வாழ்க்கையில் 
வெற்றி என்பது 
அதற்காக முயற்சிப்பவர்களுக்கு 
மட்டுமே கிடைக்கிறது



37. உலகில் பல தோல்விகளைக் 
கடந்து வந்து தான் 
வெற்றி மகுடத்தை 
வென்று இருக்கிறார்கள் 
சாதனை படைத்த 
அனைத்து வீரர்களுமே



38. தோல்வியை மட்டுமே காண்கிறாய் 
என்று கவலைப்படாதே
நீ வெற்றியைக் காணும் நாளும் 
வெகு தூரம் இல்லை 
என்பதை நினைவில் கொள்



39. பலரின் வாழ்க்கை 
அவமானத்தில் இருந்தே ஆரம்பமாகிறது
ஒவ்வொரு அவமானமும்
நம்மை ஒரு படி மேலே உயர்த்துகிறது



40. உன் அனைத்து 
பிரச்சனைகளையும் 
சவாலாக மாற்றி பார்
சற்றும் சோர்ந்து போக மாட்டாய்
சாதனைகளைப் படைக்க
முயற்சி செய்வாய்


41. பயத்தையும் தயக்கத்தையும் 
தூரத்தில் தூக்கி போடு
விடாமுயற்சியையும் 
தன்னம்பிக்கையையும் 
மனதின் ஆழத்தில் விதைத்து விடு



42. நீ இருட்டில் நடந்தாலும்
இன்னல்களைச் சந்தித்தாலும்
உன்னிடம் தன்னம்பிக்கை 
இருக்குமாயின்
உன் வாழ்க்கை 
பிரகாசமாக இருக்கும்



43.உள்ளத்தில் நம்பிக்கையும்
உடம்பில் தெம்பும் இருக்கும்
வரை நம் தோற்பதில்லை
எதையும் கண்டு அஞ்சுவதுமில்லை




44. ஆண்டவனின் அருள் 
உன்னுடன் இருக்க
அறிவும் ஆற்றலும் 
உன்னிடத்தில் இருக்க
வெற்றி எப்போதும் 
உனக்கு சொந்தமே



45. நீ செய்யும் 
முயற்சியும் பயிற்சியும் 
என்றும் வீண் போகாது
உனக்கான வெற்றி 
ஒரு நாள் உன்னை வந்து சேரும்



46. தடைகளைக் கண்டு தயங்காதே
நீ முயற்சிக்க தொடங்கினால் 
புது பாதைகளும் உனக்காக உருவாகும்



47. வரலாற்றில் 
உன் பெயரை பதிக்க
வாழும் வரை 
நீ என்னை உன்னுடன் 
வைத்து கொள்ள வேண்டும்
இப்படிக்கு முயற்சி



49. ஒவ்வொரு நாளும் 
ஒரு சவாலான நாளாக அமைந்தாலும்
சாமர்த்தியமாக அதனை சமாளித்து
சந்தோசமாக வாழ்வதே சிறந்தது



50. நீ எதிர்பார்ததை உனக்கு தராமல்
நீ எதிர்பாராததை 
உனக்கு தருவதே வாழ்க்கை
எதற்கும் துணிந்து நில்
வாழ்க்கையில் நிமிர்ந்து நில்



51. வாழ்க்கையில் 
எந்த சூழ்நிலையிலும் 
கவலையோடும் 
குழப்பத்தோடும் இருக்காதே
எதையும் தையிரியமாக கடந்து செல்



52. வாழ்க்கையில் 
எந்த செயலையும் 
விரைவாக செய்ய வேண்டும் 
என நினைக்காமல் அதனை
நிறைவாக செய்து முடிப்பதே சிறப்பு



53. வாழ்க்கையில் 
சரியான ஒரு முடிவை எடுக்க
பல முறை யோசிப்பதில் தவறில்லை



54. நீ செய்வதை விரும்பி செய்தால்
வெற்றி கூட விரும்பி 
உன் அருகில் இருக்கும் 

Post a Comment

0 Comments