Subscribe Us

Header Ads

Heart Pain Quotes In Tamil

HEART PAIN QUOTES IN TAMIL



Heart Pain Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே,ஒவ்வொரு மனிதனும் பல மன வலிகளோடு தான் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். சில நேரங்களில், மன காயங்களினாலும் மன வலிகளினாலும் நாம் மனம் உடைந்து போகிறோம். நம்முடைய நல்ல உறவுகளின் அன்போடும் ஆதரவோடும் இந்த மன துயரங்களைக் கடந்து செல்கிறோம். காலங்கள் கடந்து போக, நாமும் சில மன காயங்களை மறந்து விடுகிறோம். உங்களின் மனதில் நிறைய கவலைகளும் மன வலிகளும் இருக்கிறதா? அதனை முடிந்த வரை உங்களின் அன்பான உறவுகளிடம் கூறி உங்களது மன பாரங்களைச் சற்று குறைத்து கொள்ளுங்கள். இதோ இந்த பதிவில் தமிழில் எழுதிய Heart Pain Quotes-யை பதிவிட்டுள்ளோம்.


Heart Pain Quotes In Tamil


1. மன வலிகள் இல்லாத மனிதர்கள்
இந்த உலகத்தில் இல்லை
எல்லோரும் மன வலிகளை 
மறைத்து புன்னகையோடு 
வாழ்கிறார்கள்



2. மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு
மௌனமும் காலமும்
சிறந்த மருந்தாகும்



3. பிறரின் ஆறுதல்
நம்முடைய மன துயரங்களை
எடுத்து செல்கிறது



4. மன வலியைச் சமாளிக்க 
தெரிந்த மனிதன் என்றும் 
அதிக மன வலிமையோடு 
வாழ்வான்



5. நல்ல இசையும்
நல்ல உறக்கமும்
நம் மனதில் 
உள்ள பாரங்களைக்
குறைக்கின்றது



6. சிலர் மன காயங்களைக்
கொடுக்கிறார்கள்
சிலர் மன வலிகளைப்
போக்க உதவுகிறார்கள்



7. நமக்கு பல மன வேதனைகள்
இருந்தாலும்
நாம் மனம் தளராமல் 
ஒவ்வொரு நாளையும் 
புன்னகையுடன் கடந்து போக வேண்டும்



8. சில சமயங்களில்
நாம் அதிகம் நேசிப்பவர்கள் தான் 
நமக்கு நிறைய 
மன வலிகளையும் கொடுக்கிறார்கள்



9. உங்களின் மன துயரங்களை 
உள்ளத்தில் பூட்டி வைக்காதீர்கள்
உங்கள் அன்பானவர்களிடம் 
பகிர்ந்து கொள்ளுங்கள்



10. கண்ணீர் விட்டு அழுவதால்
மன பாரங்கள் 
எல்லாம் குறைந்து 
மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது



11. எல்லா துன்பங்களிலும்
நமக்கு ஆறுதலாக இருப்பது 
நம் கண்ணீர்துளிகளே



12. மன வலிகள் ஏற்படும் போது 
நம்மை கேட்காமல்
நம் கண்களும் கலங்குகிறது



13. சிலரின் மேல் 
நாம் வைத்த பாசத்திற்குக் 
கடைசியில் கண்ணீர்துளிகளும் 
மன காயங்களுமே 
நமக்கு பரிசாக கிடைக்கிறது



14. பொய்யான உறவுகளுக்காக
என்றும் கண்ணீர் சிந்தாதீர்கள்



15. உங்களை வேண்டாம் என 
எண்ணி உங்களை 
தூக்கி எறிந்தவர்களின்
அன்புக்காக 
நீங்கள் வருந்தி பயனில்லை



16. சில உறவுகளின் பிரிவை 
நாம் ஏற்று கொண்டாலும்
நம் மனம் மட்டும் 
ஏற்று கொள்ளாமல் அனுதினமும்
வலிகளோடு போராடுகிறது



17. சிலரின் நினைவுகள் கூட 
நம்மை அழ வைக்கிறது
மறைந்த வலியை மீண்டும்
மனதில் தோன்ற வைக்கிறது



18. சிலர் கொடுத்த 
மன காயங்களைக் 
கடந்து போகலாம்
ஆனால் என்றும் 
மறக்க முடியாது



19. உடம்பில் ஏற்பட்ட காயங்களும் 
மருந்தால் குணமாகிவிடும்
உள்ளத்தில் உண்டான 
காயங்களும் காலத்தால்
மறைந்துவிடும்



20. காயங்களை யார் வேண்டுமானாலும்
எளிதில் ஏற்படுத்தலாம்
ஆனால் காயப்படட மனதிற்கு 
பாசத்தால் வைத்தியம் பார்க்க 
ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்



21. யாரிடமும் சொல்ல முடியாத 
என் மனதின் துயரத்தை 
எல்லாம் சுலபாக 
எழுதி விடுகிறேன் 
என் கவிதைகளில்



22. இந்த உலகத்தில்
நம்மை அழ வைக்க 
ஆயிரம் பேர் இருப்பார்கள்
சில உண்மையான 
உறவுகள் மட்டுமே
நமக்கு ஆறுதல் சொல்வார்கள்



23. வலிகளும் காயங்களும் 
நிறைந்த மனதில்
நிம்மதியும் இருப்பதில்லை
மகிழ்ச்சியும் பிறப்பதில்லை



24. யாருக்கும் மன வலியைக் 
கொடுக்காதீர்கள்
ஒரு நாள் அந்த வலி 
உங்களைத் தேடி வந்தே தீரும்



25. நம் கண்களுக்குப் 
பிறரின் புன்னகைகள் 
மட்டுமே தெரியும்
அவர்கள் இதயத்தில் சுமக்கும் 
வேதனைகளைத் தெரியாது



26. இப்போதெல்லாம் யாரும் 
தங்களின் மன வலிகளைப் 
பிறரிடம் சொல்வதில்லை
காரணம் நம்முடைய 
மன துயரங்களைப் பார்க்க 
சிலருக்கு கேளிக்கையாக இருக்கிறது



27. சிலர் மௌனத்தினால்
சிலர் கண்ணீரால்
சிலர் கோபத்தினால்
ஒவ்வொருவரும் 
பல வகைகளில் 
தங்களின் மன வேதனைகளை 
வெளிப்படுகிறார்கள்



28. பிறர் கொடுக்கும் வலியை கூட 
நாம் தாங்கி கொள்ளலாம்
ஆனால் நாம் நேசித்தவர்கள் 
கொடுக்கின்ற மன வலியை தான் 
தாங்க முடியாமல் நம் மனம் அதிகம்
கஷடப்படுகிறது



29. காரணங்களே இல்லாமல் 
சில உறவுகளின் பிரிவுகள் இருந்தாலும்
அந்த பிரிவினால் 
ஏற்படும் வலிகள் மட்டும் 
காலம் முழுவதும் கடைசி வரை 
மனதில் நீடிக்கிறது



30. சிலரின் மன மாற்றம் கூட 
நம் மனதில் பல காயங்களை 
ஏற்படுத்துகிறது



31. வாழ்க்கையில் 
காயப்பட்ட பின்பு தான் 
பலரின் உண்மையான 
குணம் தெரிகிறது



32. துன்பங்களையும் 
கஷ்டங்களையும் 
அனுபவித்த பிறகே 
மனிதன் பொறுமையையும் 
பணிவையும் 
கற்று கொள்கிறான்



33. வாழ்க்கையில் நாம் தொலைத்த 
உறவுகளை நாம் மீண்டும் 
தேடி செல்லலாம்
நம்மை விலகி சென்ற 
உறவுகளை ஒரு போதும் 
நாம் தேட கூடாது



34. மரணம் கூட ஒரு நொடியில் 
நம்முடைய உயிரை 
எடுத்து கொள்ளும்
ஆனால் சில வேதனைகள் 
நம்மை நாளும் கொல்கிறது



35. சிலருக்கு நாம் சிரித்தால் 
பிடிக்காது அதனால் 
நம்மை அதிகம் 
அழ வைப்பார்கள்



36. சில மன வலிகளை 
மறக்க மருந்து தேடுகிறேன்
கடைசியில் மரணமே 
தீர்வாக வருகிறது



37. மனதில் ஏற்பட்ட 
சில காயங்கள் மட்டும் 
மரணம் வரை 
நம் மனதை விட்டு விலகாது



38. எல்லோரிடமும் 
உண்மையான அன்பு வைத்த 
எனக்கு கடைசியில் 
பரிசாக கிடைத்தது 
காயங்கள் தான்



39. இதுவும் மறந்து போகும் 
என நினைக்கும் போதெல்லாம் 
பல நினைவுகள் மீண்டும் 
என் மனதில் வந்து போகின்றது



40. யாரையும் வெறுக்க வேண்டாம்
யார் எப்போது 
இந்த உலகத்தை 
விட்டு போவோம் 
என்று நமக்கு தெரியாது



41. நம் மனதை 
உறுதியாக்குவதும் அன்பு தான்
நம் மனதை 
உடைப்பதும் அன்பு தான்



42. போலியான 
உறவுகளைக் கண்டு 
ஏமார்ந்து இன்று 
வாழ்க்கையை 
இழந்து நிற்பவர்கள் பலர்



43. அன்பு பெறாமல் 
இருப்பதை விட
போலியான அன்புக்கு 
அடிமையாவது 
இன்னும் பல காயங்களை 
நம் மனதில் ஏற்படுத்தும்



44. எவ்வளவு தான் 
மறக்க முயற்சி செய்தாலும் 
அன்பான உறவுகளை 
நம்மால் மறக்கவே முடிவதில்லை



45. வலிகளோடு இருந்து 
என் மனமும் உறுதியானது
மீண்டும் என் மனதை 
உடைக்க முயற்சிக்காதே



46. உறவுகளிடையே 
புரிதல் இல்லாதலால் தான் 
இங்கு பல வேதனைகள் 
ஏற்படுகிறது



47. அதிக அன்பு வைத்து 
நாளும் அவர்களுக்காக
துடிக்கும் இதயத்தையே 
சிலர் காயப்படுத்தி விடுகிறார்கள்



48. எல்லோரிடமும் 
அதிக அன்பு வைத்ததால்
இப்போது நான் 
அதிகமாக அழுகிறேன்



49. எத்தனை முறை 
காயப்பட்டாலும் 
சிலரின் அன்புக்கு 
அடிமையாகி விடுகிறது 
என் இதயம்



50. யாரிடமும் சொல்ல முடியாத 
காயங்களை எல்லாம் 
என் மனதில் புதைத்து
நான் மகிழ்ச்சியாக 
இருப்பதை போல வாழ்கிறேன்



51. எவ்வளவு தான் அழுதாலும் 
சில வேதனைகள் 
மட்டும் முடிவதில்லை
பலரும் கண்ணீருடன் 
வாழ்க்கையைக் 
கடந்து போகிறார்கள்



52. நல்ல இசையும் பாடல்களும்
மன காயங்களுக்கு 
சிறந்த மருந்து தான்



53. தினமும் சிரிக்கிறோமோ 
இல்லையோ ஆனால் 
நம்முடைய துன்பங்களை 
நினைத்து வருந்துகிறோம்



54. கண்ணீரால் 
எந்த காயங்களும் 
மறைந்து போவதில்லை
ஆனால் மனதில் 
புது நிம்மதி பிறக்கலாம்


Post a Comment

0 Comments