Subscribe Us

Header Ads

Best Life Motivational Poems and Quotes In Tamil

BEST LIFE MOTIVATIONAL 

POEMS AND QUOTES IN TAMIL




Best Life Motivational Poems and Quotes In Tamil




வணக்கம் நண்பர்களே,நம் வாழ்க்கையில் கஷ்டங்களும் துயரங்களும் வருவது இயல்பு தான். ஆனால் அந்த துன்பங்களை நாம் எதிர் கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்க்குச் செல்வது தான் பெரிய சவாலாக இருக்கிறது. சில துன்பங்களிலிடுந்து மீண்டு வர முடியாத அளவிற்கு நம் சூழ்நிலைகள் அமைந்து விடுகிறது. சில நேரத்தில், நாம் இந்த கஷ்டங்களை எல்லாம் சமாளிக்க பிறரின் ஊக்குவிப்பும் உதவியும் தேவைப்படுகிறது. நீங்களும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைக் கண்டு சோர்ந்து போகாமல் அவற்றை எல்லாம் எதிர் கொள்ள வேண்டும். உங்களை உற்சாகம் படுத்த இதோ இந்த பதிவில் தமிழில் எழுதிய சிறந்த Life Motivational Poems and Quotes-யை பதிவிட்டுள்ளோம்.



Best Life Motivational Poems and Quotes In Tamil


1. இருளை கண்டு 
நிலா பயந்ததில்லை
வாழ்க்கையின் 
இன்னல்களைக் கண்டு 
மனம் உடைந்து போகாதே



2. உன் எதிர்கால வாழ்க்கை
உன் கையில் உள்ளது
தெளிவாய் சிந்தித்து
நிதானமாய் உன் வாழ்க்கை 
முடிவுகளை எடுக்க பழகி கொள்



3. உன் வாழ்க்கையில்
இருள் சூடிய காலம் இருந்தால்
நிச்சயம் ஒரு நாள்
வசந்த காலமும் வரும்
உன் நம்பிக்கையை இழக்காதே
நீ பொறுமையுடன் காத்திரு 
காலம் உனக்கு பதில் சொல்லும்



4. இது வரை உன் வாழ்க்கையில்
நீ இழந்ததை எல்லாம் மறந்து விடு
இனி எதையும் நீ இழக்காமல்
இருக்க சற்று கவனமாய் இரு



5. நல்ல குழந்தையாக
இந்த மண்ணில் பிறந்தோம்
வாழும் போது 
நல்லவராய் இருப்போம்
மரணம் வரை சிறந்த 
மனிதராய் வாழ்வோம்



6. வாழ்க்கையில் அனைவரையும் 
மதிக்க கற்று கொள்
ஆனால் யாருக்காகவும்
உன் சுயமரியாதையை இழக்காதே



7. வாழ்க்கையை என்றும்
ரசித்து வாழ்ந்திடு
அப்போ
து தான்
வாழ்க்கையின் சுவாரஸ்யம் புரியும்
வாழ்க்கையில் எல்லாவற்றையும் 
சுலபமாக கடந்து போக முடியும்



8. உன் வாழ்கை பயணத்தில்
நீ எல்லோரிடமும் பழகலாம்
ஆனால்
எல்லோரையும் நம்ப முடியாது
பொய்யான உறவின் மேல் 
நம்பிக்கை வைத்து ஏமாறாதே



9. உனக்கு ஒருவரை 
பிடிக்கவில்லை என்றால்
ஒதுங்கி விடு
யாருக்கும் துரோகம் செய்வதைத் 
தவிர்த்து விடு



10. வாழ்க்கையில் கஷ்டங்கள் முடிவதில்லை
கஷ்டங்களை மட்டும் 
போக்க உழைக்காதே
இஷ்டப்பட்டு உழைத்து வாழு
இன்பங்கள் வாழ்க்கையில் அதிகரிக்கும்




11. எல்லோரின் வாழ்க்கைக்கும்
ஒரு விடிவு காலம் இருக்கு
அது எப்போது என்று
தான் தெரியவில்லை
அது வரை வாழ்க்கையின் 
தருணங்களைக் 
கடந்து போக தான் வேணும் 
நமக்கான நேரம் வரும் வரை
காத்திருப்போம்



12. வாழ்க்கையில்
நீ அதிகம் நேசித்தவர்களே
உன்னை தூக்கியெறிந்தால்
நீ வருத்தம் கொள்ளாதே
அவர்கள் முன்னால்
சிறப்பாக வாழ்ந்துகாட்டு
நீ யாரென்று நிரூபித்துக்காட்டு



13. வாழ்க்கையில் உனக்கு 
எல்லாம் தெரியும் என நினைக்காதே
நமக்கு தெரியாத 
பல விஷயங்களைத் தான் 
வாழ்க்கை நமக்கு கற்று கொடுக்கிறது
எல்லாவற்றையும் நல்ல
பாடமாக எடுத்து கொள்வோம்



14. வாழ்க்கையில் பணம் வந்த பின் 
பண்பற்றவனாய் மாறி விடாதே
என்றும் பணிவுடன் 
நடந்து கொள்வதே சிறப்பு



15. வாழ்க்கையில் எல்லோருக்கும் 
ஒரு வித கஷ்டம் இருக்கிறது
உன்னால் பிறருக்கு
கஷ்டம் வராமல் 
பார்த்து கொள்ள வேண்டியது
உன் கடமையாகும்



16. வாழ்க்கையில் 
வெற்றி பெற்றவர்கள் 
எல்லாம் முதலில் 
பல தோல்விகளைச் சந்தித்தவர்ளே
உன்னால் முடியுமானால் 
நீயும் வாழ்க்கையில் 
சாதித்து விடலாம்



17. வாழ்க்கையில் நீ பட்ட அவமானங்களை
என்றும் மறக்காதே
அதுவே உன் வாழ்கையின் 
முக்கியமான 
அனுபவமாக இருக்கும்
அதுவே உன் வாழ்க்கையின் 
முன்னேற்றத்திற்கான
காரணமாக இருக்கும்



18. வாழ்க்கையின்
ஒவ்வொரு நிலையையும்
கடந்து போகும் போது தான்
நம்முடைய மன வலிமையைத்  
தெரிந்து கொள்வோம்
நம்மால் என்ன சாதிக்க முடியும் 
என்பதை அறிந்து கொள்வோம்



19. வாழ்கையில்
உன் இலட்சிய பாதையில்
நீ முதல் அடியை
எடுத்து வைத்தால்
பிறகு தானாகவே நீ ஓட 
தொடங்கி விடுவாய்
உன் வெற்றியை விரைவில் 
நெருங்கி விடுவாய்



20. உன்னால் முடியாது என்று
உனக்கு நீயே எல்லையைப் 
போட்டு கொள்ளாதே
ஒரு முறையாவது முயற்சித்து பாரு
ஒரு புதிய வீரனாய் மாறு



21. இந்த உலகில் எல்லோருக்கும் 
உன்னை பிடிக்கும் என்று
ஒரு போதும் எண்ணாதே
சில எதிரிகள் இருந்தால் தானே
உன் வாழ்க்கையில் வரும் 
துன்பங்களைக் கூட 
நீ சவாலாக எடுத்து கொள்வாய்
உன்க்கென ஒரு 
எதிர்கால நோக்கத்தை 
நீ அமைத்து கொள்வாய்



22. வாழ்க்கையில்
எல்லோருக்கும் ஒரு சிறந்த 
எடுத்துகாட்டாக இருந்து 
உன் வாழ்க்கையைச் சிறப்பாக வாழு
ஆனால் யாருடைய 
வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் 
நீ முட்டுகட்டையாக இருந்து விடாதே



23. வாழ்க்கையில் எத்தனை முறை 
விழுந்தாலும் மீண்டும் எழுந்து விடு
ஒரு நாள் விழாமல் வாழ்க்கையில்
வெற்றி நடை போட்டிடுவாய்



24. இந்த உலகில்
தினமும் பல உயிர்கள் இறக்கின்றன
இந்த கணம் வரை
நீ இன்னும் உயிர் வாழ்கிறாய் 
என்பதற்காக இறைவனிடம்
உன் நன்றிகளைக் கூறி விடு



25. வாழ்க்கையில்
உன் முன்னாடி 
இருப்பவனையும் பார்க்காதே
உன் பின்னாடி 
இருப்பவனையும் தாழ்த்தாதே
உன் வாழ்க்கை பாதையில்
மட்டும் நீ பயணித்திடு
உணக்கான வாழ்க்கையைச் 
நீ சரியாக வாழ்ந்திடு



26. என்னால் முடியும்!
என்ற வாழ்க்கை மந்திரத்தை
உச்சரிக்க தொடங்கு
பல வெற்றிகள் உன்னை தொடரும்



27. நம்முடைய வாழ்க்கை
நிலையைக்  கண்டு
இழிவாக சிரிப்பவர்கள் முன்
நாம் முகத்தில் சிரிப்புடன் 
வாழ்க்கையைச் சிறப்பாய் 
வாழ்ந்து காட்டுவதே
நமக்கு கிடைத்த 
பெரும் வெற்றியாகும்



28. எங்கு நீங்கள் கண்கலங்கி அழுது 
அவமானம் பட்டீர்களோ
அங்கே காலத்தால் 
அழிக்க முடியாத அடையாளமாய் 
உங்களை நீங்கள் 
உருவாக்கி கொள்ளுங்கள்
உங்களின் பெயரை
சாதனையாளர்கள் பட்டியலில் 
இணைத்து விடுங்கள்



29. நம்மை நாமே
உறுதியாக செதுக்கி விட்டால்
நம்முடைய வாழ்க்கையில்
எந்த துன்பத்திலும்
சறுக்கி விழ மாட்டோம்



30. நம் வாழ்கையில்
நேரம் பொன் போன்றது
நம்முடைய பொன்னான நேரத்தை
பயனுள்ள விஷயத்திற்காகச் 
செலவழிப்போம்



31. எந்த இடத்தில்
எந்த குறைகளுக்காக 
நீ நிராகரிக்கப்பட்டாயோ
அந்த குறைகளை 
நீ நிவர்த்தி செய்து விட்டு
உன்னை மேலும் தகுதி
படுத்தி கொண்டு
அதே இடத்தில் 
நீ நிமிர்ந்து நிற்க வேண்டும்



32. தயக்கமும் பயமும் 
உங்களுக்குள் இருக்கும் வரை
உங்களுடைய 
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
உங்களின்  வெற்றிக்கு 
உதவி செய்யாது



33. கடந்து போன 
நிகழ்வுகளை 
எண்ணி வருத்தப்படாதே
இனி நடக்க போகும் 
நிகழ்வுகள் நிறைய உண்டு



34. பொறுமையாக இருப்பவன்
தோல்வி பெற மாட்டான்
பொறாமை கொண்டவன்
வெற்றி பெற மாட்டான்



35. வாழ்க்கையில் பல பாடங்களைக் 
காற்று கொண்டால் 
மட்டும் போதாது
அவற்றை முறையாக 
பயன்படுத்தி 
நன்மை பெற வேண்டும்



36. நாம் தினமும் செய்யும் 
சின்ன சின்ன செயல்களே
நம்முடைய வெற்றியை 
நம் கையில் தருகிறது



37. முதலில் உங்களின் 
கனவுகளைப் பட்டியலிடுங்கள்
பிறகு அதை நிறைவேற்ற 
சரியான பாதையில் பயணியுங்கள்
பல முயற்சிகளைச் செய்யுங்கள்  



38. வாழ்க்கையில் வெற்றி தோல்வி 
என்பது அனைவருக்கும் உண்டு 
ஒவ்வொருவரும் 
அதை கையாளும் முறை தான் வேறு



39. உன் தோல்விகளை 
நீ ஏற்று கொண்டால் தான்
அது கற்று தரும் பாடங்களை 
நீ உணர முடியும்



40. நம் வாழ்க்கை 
பயணம் முடியும் வரை
தோல்விகளும் வெற்றிகளும் 
நம்மோடு பயணிக்கும் அதனால்
எதற்கும் தயாராக இருங்கள்



41. தோல்விகளைக் கண்டதும் 
உள்ளம் சோர்ந்து
மனம் உடைந்து செல்பவர்களும் 
இருக்கிறார்கள்
தோல்விகளைக் கண்டு 
மீண்டும் விடாமுயற்சியோடு 
போராடுபவர்களும் இருக்கிறார்கள்



42. உன் கால்கள் 
வெற்றி பாதையில் ஓடட்டும் 
உன் கரங்கள் உழைக்கட்டும் 
உன் உள்ளம் 
வெற்றியை மட்டும் 
நினைக்கட்டும்



43. தொடர்ந்து தோல்விகளைக் 
காண்கிறாய் என்று பயப்படாதே
வெற்றிக்காக உன்னை 
தயார்படுத்தி கொண்டிருக்கிறது 
உன்னுடைய தோல்விகள்



44. உன்னுடைய 
சிறந்த திட்டங்கள் தான் 
உன் வெற்றியை 
முடிவு செய்யும்



45. பயத்தை எதிர்த்து 
வாழ்க்கையில் எதற்கும் 
துணிந்து நிற்பதே 
நம்முடைய பெரிய 
வெற்றியாகும்


Post a Comment

0 Comments