ROMANTIC LOVE QUOTES IN TAMIL



Romantic Love Quotes In Tamil



வணக்கம் நண்பர்களே, நாம் நம் அன்பானவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவோம் . நாம் அவர்களுக்கு நிறைய பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களின் முகத்தில் சந்தோசங்களை வர வைத்து நாமும் அதை கண்டு மகிழ்வோம்.நாம் அவர்களுக்கு அழகிய கவிதைகளைக் கூட அனுப்பி நம் பாசத்தையும் அன்பையும்  
வெளிப்படுத்தலாம். நீங்களும் உங்கள் அன்பானவர்களுக்கு  இனிய அன்பு கவிதைகளை அனுப்பி அவர்களை ஆனந்தமாக்க இதோ தமிழில் எழுதிய Romantic Love Quotes-யை  இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.



Romantic Love Quotes In Tamil


1. உன்னை காதலித்த
நாள் முதல்
என் உலகம் நீதான்
என் உயிரும் நீதான்
என் உறவும் நீதான்
என் உணர்வும் நீதான்
என் வாழ்க்கையே நீதான்
நான் வாழ்வதும் உனக்காக தான்
 


2. என் காதல் கவிதையின் 
தலைப்பாக நீ இருந்தாய்
அந்த கவிதை முழுவதும்
நாம் காதலித்தத் 
தருணங்களைக் கோர்த்து
கவிதை வரிகளாக
எழுதினேன்



3. தொலைந்த என்னை 
எங்கும் தேடி பார்த்தேன்
கிடைக்கவில்லை
உன் இதயத்தில் 
நெருங்கி பார்த்தேன்
உன் உள்ளத்தில் என்னை 
சிறையடைத்து வைத்திருந்தாய்
சிரிப்புடன் என்னை மகிழ்வித்திருந்தாய்



4. என் இதயத்தின் கதவை திறந்து
காதலை நுழைத்து
அழியாத காதல் கோட்டையை 
அமைத்து ஆனந்தமாய்
நீ வாழ்கிறாய்
 


5. காதல்
சில நேரம் அழகான 
கனவுகளை தருகிறது
சில நேரம் அருவியாக
கண்ணீரை தருகிறது
காதலின் உணர்வும் 
சுகமானது
காதலின் வலியும்
சொல்லமுடியாதது
 


6. முகத்தின் அழகை 
ரசித்து வந்த காதல் 
முடிவில் பிரிகின்றது
அகத்தின் அன்பை 
பார்த்து வந்த காதல் 
அழியாமல் வாழ்கிறது
 


7. மலரோடு தென்றல் பேச
இரவோடு நிலா பேச
உன்னோடு நான் பேச
காதலும் மலர்ந்தது
கவிதையும் பிறந்தது



8. வாழ்க்கையின் தேடலில்
எனக்கு கிடைத்த வரமாக
உன் காதல் என்னை சேர்ந்தது
என் வாழ்க்கையில்
எந்நாளும் இன்ப நாளாய் பிறந்தது
என் இதயத்தின் 
துன்பம் எல்லாம் மறைந்தது

 

9. ஒவ்வொரு நாளும் 
செடியில் மலர்கள் 
மலர்கின்றது
ஒவ்வொரு நொடியும் 
காதலில் இதயங்கள்
இணைகின்றது

 

10. என் விழிகளில் உன்னை 
பார்த்த நொடியிலிருந்து
இன்று வரை என் இதயம் 
உன்னை காதலிருக்கிறது
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயரை சொல்லுகிறது



11. ஆயிரம் உறவுகளிடம் பேசினாலும்
என்றும் உன் அன்பிற்க்கே 
என் இதயமும் ஏங்குகிறது
என்றும் உன் அருகில் வாழவே 
நானும் விரும்புகிறேன்
என்றும் உன்னையே
என் உள்ளமும் காதலிக்கிறது



12. காற்றோடு பேசும் மலர்களும்
மகிழ்ச்சியில் வாழ்கின்றது
உன்னுடன் பேசும் என் மனமும் 
காதலில் கவிதை எழுதுகிறது
 


13.உன்னுடைய காதல்
மழை சாரலாய் 
என் மனதைக் குளிராக்கியது
உன்னுடைய அன்பு
வானவில்லாய் என் வாழ்க்கையை
வர்ணமாக்கியது



14. என் உறக்கத்தில்
கனவுகளாக வருகிறாய்
என் மனதில் 
நினைவுகளாய் மலர்கிறாய்
நித்தமும் உன் நினைப்பாய்
நான் வாழ்கிறேன்
நிமிடமும் உன்னை 
சேர துடிக்கிறேன்
என் காதலும் காத்திருக்கிறது 
உன் உள்ளத்தில் உயிர் வாழ



15. உன் காதலால் என் மனதை 
மகிழ்ச்சியில் நிறைத்தாய்
நாளெல்லாம் என் இதயத்தை
நலமாய் பாதுகாத்தாய்
என் வாழ்க்கையில் பல
நல்ல தருணங்களைத் தந்த 
என் இதய தேவதைக்கு
உலகில் பூத்த  மலர்களால் 
பூங்கொத்து ஒன்று செய்தேன்



16. என் இதயம் பாடுகிறது 
உன் பெயரை
என் கண்கள் தேடுகிறது 
உன் உருவத்தை
என் இதயம் துடிப்பது உனக்காக
நான் வாழ்வது
என் இதய தேவதையின்
காதலுக்காக



17. என் பெயரைச் 
உன் இதயத்தில் சேர்த்தாய்
உன் உருவத்தை 
என் விழிகளில் வரைந்தேன்
நம்முடைய இரு மனமும்
காதலில் ஒன்றாய் இணைந்தது



18. உன்னோடு பேசிய நேரமெல்லாம்
அழகாய் கடந்தது
உன் அருகில் இருந்த தருணங்கள்
எல்லாம் இனிதாய் இருந்தது
உனக்காகக் காத்திருந்த காலம் 
எல்லாம் சுகமாய் சென்றது
உன்னை காண 
என் விழிகளும்  காத்திருக்கிறது
உன் காதலோடு சேர 
என் மனமும் ஆசைப்படுகிறது
காலமெல்லாம் உனக்காக
காத்திருப்பேன்



19. நம் இதயம்
நம் அன்பானவர்களுக்காகத் 
துடிப்பதனால் தான்
அவர்கள் நம்மை விட்டு 
பிரிந்தவுடன்
நம் இதய துடிப்பும் 
நின்று விடுகிறது



20. நீ என் முதல் காதலாய்
என் இதயம் முழுவதும் 
நிரம்பி விட்டாய்
இனி என்றும் உன்னை விட்டு 
பிரிய மாட்டேன்



21. உன் அன்பானப் பேச்சால்
என் முகத்தில்
புன்னகைகள் பிறந்து
என் வாழ்வும் புதிதாய் மாறியது
உன் உண்மையானக் காதலால்
என் அகத்தில்
இன்பங்கள் நிறைந்து
என் மனமும் அழகாய் உருவானது



22. என் இதயம் 
உன்னை நினைத்து
இசையமைக்க
என் கரங்கள் 
உன்னை வர்ணித்து
கவிதைகள் எழுத ஆரம்பிக்க
உன் நினைவுகளோடு
நானும் பாடினேன்
உன்னை தேடினேன்
என் உள்ளமும் அழுதது
என் கண்ணீரும் கடலானது
என் காதலும்
உன்னை சேராமல் தவிக்கிறது



23. உன் நினைவுகள் 
அனைத்தும் சுவாசமாக 
இருப்பதால் தான் 
நான் இன்னும் 
உயிர் வாழ்கிறேன்



24. உன் முதல் முத்தத்தால்
என் இதயத்தில் 
காதல் முத்திரையை 
நீ பதித்தாய்



25. உன்னோடு பல மணி நேரம் 
பேச எனக்கு வாய்ப்பு இல்லை
ஆனால் ஒவ்வொரு நொடியிலும்
நான் உன்னை பற்றியே
நினைத்து கொண்டிருக்கிறேன்



26. நீ தினமும் 
என் கனவில் வருவதால் 
இரவுக்காக நான் 
காத்திருக்கிறேன்



27. இரவின் மடியில் 
நான் உறங்கினேன்
என் கனவுகளில் 
நீ வந்து என்னை தாலாட்டி 
என்னை நிம்மதியாக 
உறங்க சொல்லி விட்டு 
நீ சென்றாய்



28. உன்னை காதலித்த பின்பே 
என் வாழ்க்கையில் 
இன்பங்கள் கூடியது
என் இதயமும் 
உல்லாசத்தில் இருந்தது



29. எந்த சூழ்நிலையிலும் 
என்னை விட்டு பிரியாமல்
எனக்கென மட்டும் 
நீ வாழ்கிறாய்
உன்னை மட்டுமே 
நான் காதலிக்கிறேன்



30. நீ புன்னகைக்கும்
ஒவ்வொரு நொடியும் எ
ன் இதயத்தில் புதிதாக 
ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது



31. என் இன்பங்களையும் சரி
என் துன்பங்களையும் சரி
உன்னோடு பகிர்ந்து கொண்டால் 
தான் என் மனம் அமைதி பெறும்



32. இரவில் வரும் 
நிலவை காண கூட 
என் மனதிற்க்கு ஆசையில்லை
உன் முகத்தைக் காணவே
என் இதயம் விரும்புகிறது



33. நீ சந்தோஷமாக 
வாழ வேண்டும் என்றே 
நான் தினமும் இறைவனை 
பிரார்த்திக்கிறேன்


34. இனிமையான தென்றலுடன்
என் மனமும் இதமானது 
உன் குரலை கேட்கும் போது


35. நீ இல்லாத வாழ்க்கையை 
ஒரு நொடி கூட 
என்னால் நினைத்து 
பார்க்க முடியவில்லை



36.. உன்னோடு வாழ்வதால் தான் 
என் வாழ்க்கையில் 
உள்ள அனைத்து நாட்களுமே 
அற்புதமான நாட்களாக மாறியது



37. நான் உன்னை 
முதன் முறையாக 
சந்தித்த போதே 
என் இதயம் 
உன்னோடு சென்று விட்டது


38. உன்னோடு பேச 
ஆசையாக இருக்கிறது
ஆனால் உன்னை கண்டதும் 
என் உதடுகள் அமைதியாகிறது
என் செவிகள் 
உன் குரலை கேட்க 
ஆவலாக இருக்கிறது



39. நான் உன்னோடு 
சிறிது காலம் தான் பழகினேன்
ஆனால் உன்னுடைய 
அளவற்ற அன்பையும் 
காதலையும் 
நன்கு புரிந்து கொண்டேன்